|
||||||||
சித்து |
||||||||
ஜால வித்தை போன்ற - சித்துக்களை விளையாடும் - அவைகளைக் கற்றுக் கொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், இத்தகைய சித்துக்களைக் காணத் துடிக்கும் - கண்டு வியப்புற்று மதிமயங்கும் நண்பர்களுக்கும் உருக...்கத்தோடு சொல்லுகிறேன், "சமூகத்திற்கு எந்தவித நன்மையையும் விளைவிக்காத நஷ்டமும் கஷ்டமுமே தரும் செயல்கள் பலவற்றை சித்து எனக்கொள்ளும் மயக்கத்தை விட்டுவிடுங்கள்" நன்றாக ஆராயுங்கள். ஒரு துளி விந்துவைக் கருப்பையில் வாங்கி பத்தாவது மாதத்தில் எழில் மிகுந்த அற்புத சிற்பமான குழந்தையாக்கித் தரும் தாய்மார்களின் உடலில் நடைபெறும் சித்து எத்தகையது? ஒரு நெல்லை நூறு நெற்களாக்கித் தரும் விவசாயியின் செயல் ஒரு சித்து அல்லவா? ஒரு பொத்தானை ஒரு இடத்தில் அமுக்கினால் எவ்வளவோ இடத்தில் எண்ணிறந்த விளக்குகள் எரிகின்றனவே இது ஒரு பெருஞ்சித்து அல்லவா? இரும்பை நகரச் செய்தும், பறக்கச் செய்தும் அதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் சுலபமாக பல மைல் தூரத்தை எளிதாகக் கடந்து பிரயாணம் செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்களே சில தொழில் அறிஞர்கள் இது எத்தகைய சித்து?
ஒரு நாளைக்கு இருபத்தையாயிரம் மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றியும் சுமார் 16 லட்சம் மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றியும் வரும் பூமியின் இயக்கத்தை, எந்தவிதமான சித்து என மதிக்க வேண்டும். இவ்விதமாக இயற்கையிலும் செயற்கையிலும் நடைபெறும் சித்துக்களை ஊன்றி ஆராயுங்கள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
ஜால வித்தை போன்ற - சித்துக்களை விளையாடும் - அவைகளைக் கற்றுக் கொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், இத்தகைய சித்துக்களைக் காணத் துடிக்கும் - கண்டு வியப்புற்று மதிமயங்கும் நண்பர்களுக்கும் உருக...்கத்தோடு சொல்லுகிறேன், "சமூகத்திற்கு எந்தவித நன்மையையும் விளைவிக்காத நஷ்டமும் கஷ்டமுமே தரும் செயல்கள் பலவற்றை சித்து எனக்கொள்ளும் மயக்கத்தை விட்டுவிடுங்கள்" நன்றாக ஆராயுங்கள். ஒரு துளி விந்துவைக் கருப்பையில் வாங்கி பத்தாவது மாதத்தில் எழில் மிகுந்த அற்புத சிற்பமான குழந்தையாக்கித் தரும் தாய்மார்களின் உடலில் நடைபெறும் சித்து எத்தகையது? ஒரு நெல்லை நூறு நெற்களாக்கித் தரும் விவசாயியின் செயல் ஒரு சித்து அல்லவா? ஒரு பொத்தானை ஒரு இடத்தில் அமுக்கினால் எவ்வளவோ இடத்தில் எண்ணிறந்த விளக்குகள் எரிகின்றனவே இது ஒரு பெருஞ்சித்து அல்லவா? இரும்பை நகரச் செய்தும், பறக்கச் செய்தும் அதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் சுலபமாக பல மைல் தூரத்தை எளிதாகக் கடந்து பிரயாணம் செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்களே சில தொழில் அறிஞர்கள் இது எத்தகைய சித்து?
ஒரு நாளைக்கு இருபத்தையாயிரம் மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றியும் சுமார் 16 லட்சம் மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றியும் வரும் பூமியின் இயக்கத்தை, எந்தவிதமான சித்து என மதிக்க வேண்டும். இவ்விதமாக இயற்கையிலும் செயற்கையிலும் நடைபெறும் சித்துக்களை ஊன்றி ஆராயுங்கள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
|
||||||||
by Swathi on 20 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|