LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

சிவ பூஜையில் கரடி

மாவீரன் அலெக்சாண்டரைப் பார்க்க வந்த அயல்நாட்டு விருந்தினர் ஒருவர் , “ பேரரசே ! உங்கள் நகரிலுள்ள தோட்டங்களில் வீரமரணம் அடைந்த எண்ணற்ற வீரர்களின் சிலைகளை வைத்திருக்கிறீர்கள் . தங்களின் சிலையை மட்டும் ஏன் வைக்கவிலலை ?” என்று கேட்டார் .

அதற்கு அலெக்சாண்டர் “ என்னுடைய உருவச் சிலையை நான் இங்கு வைத்தால் எதிர்காலத்தில் என் பெயர் மறைந்துவிடும் . இது யாருடைய சிலை என்று என் சிலையைப் பார்த்துக் கேட்பார்கள் . அதைவிட என் சிலை வைக்கப்படாதிருந்தால் “ இவ்வளவு சிலைகள் இருக்கும்போது அலெக்சாண்டரின் சிலை மட்டும ஏன் இல்லை ? என்று கேட்கட்டும் . அதைத் தான் நான் விரும்புகிறேன் .” என்றார் .

இப்படித் தற்பெருமையோடு நடப்பவர்களால் தான் சில சமயம் சலசலப்புகள் ஏற்படும் . தங்களை முன்னிறுத்திக் கொள்ள எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் . இல்லாவிட்டால் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள் . இந்த மாதிரியான வீண் பந்தாக்கள் எல்லாம் பெருந்தலைவரிடம் கிடையாது . அம்மாதிரி நடப்பவர்களையும கண்டிப்பார் .

திராவிடர் கழக , திராவிட முன்னேற்றக் கழக கட்சிகள்வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலம் , எந்த நேரத்தில் கூட்டம் என்றாலும் பெரியார் குறிப்பிட்ட நேரத்தில் மேடையில்இருப்பார் . ஆனால் கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் அண்ணா வருவார் . அவரைப் பார்த்ததும் கூட்டத்தினர் “ அண்ணா வாழ்க ” என்று உரத்த குரலில் முழக்கமிடுவர் . அந்த ஒலிக்கிடையே வந்து மேடையில் அமர்வார் . இதனால் அவர் வரும் நேரத்தில் மேடையில் யார் முழங்கிக் கொண்டிருந்தாலும் , தொடர்ந்து பேசமுடியாமல் போகும் . சர்வக் கட்சிக் கூட்டமாக இருந்தால் அதில் பேசுகின்ற மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்த சோதனை நடக்கும் .

எந்தக் கூட்டமாக இருந்தாலும் நிறைவாக முத்தாய்ப்புப்பேச்சாளர் அண்ணா என்பதால் வீணாகச் சிலமணி நேரம் மேடையில் ஏன் கழிக்க வேண்டும் ? என்று அவர் எண்ணியிருக்கலாம் .

ஆனால் அந்த அண்ணாவுக்கு இதுபோல் ஒரு சோதனை ஏற்பட்டது . திலகர் கட்டிடத்தில் 1960 ஆம் ஆண்டு ஒரு கூட்டம் நடந்தது . அதில் அண்ணா உரையற்றிக்கொண்டிருந்த போது திரு . எம் . ஜி . ஆர் . வந்தார் . உடனே அவரைக் கண்ட கூட்டத்தினர் ஆரவாரக் குரல் எழுப்ப அண்ணாவாலேயே சில நொடிகள்பேச முடியாத நிலை ஏற்பட்டது .

இதே போன்ற சோதனை பெருந்தலைவருக்கு ஏற்பட்டபோது அதை சாமர்த்தியமாகச் சமாளித்தார் . 1964 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கட்சி இந்திய தேசியக் காங்கிரசோடு இணைந்த கூட்டம் நடந்தது . அதில் இனிமையாகப் பேசக் கூடியவர் திரு . ஈ . வி . கே சம்பத் . மென்மையான சொற்களால் வன்மையாகப் பேசக் கூடியவர் கண்ணதாசன் .

திருச்சியில் இரு கட்சி இணைப்புக்கும் பின் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் மாலை நேரப் பொதுக்கூட்டம் . பலர்பேசிய பின் காமராசர் பேசிக் கொண்டிருந்தார் . நாட்டு நடப்பு , மக்கள் நிலை பற்றி ஆழமாகவும் , அழுத்தமாகவும் உரையாற்றிக்கொண்டிருந்தார் . அப்போது திடீரென கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது . கைதட்டல் வந்த இடத்தை தலைவர் கூர்ந்து பார்த்தார் .

அங்கே வந்து கொண்டிருந்தவர் கவியரசர் கண்ணதாசன் . அவரைப் பார்த்து விட்ட தலைவர் “ யாரு ? கண்ணதாசனா ? ஏ கிறுக்கா அப்படியே உட்காரு ” என்று ஒலி பெருக்கியிலேயே ஒரு போடு போட்டார் . கண்ணதாசனும் அப்படியே தரையில் அமர்ந்தார் .

தவைர் உரை தொடர்ந்து நடந்து முடிந்தது . அதன் பின்னர் கண்ணதாசன் என்ற எரிமலை முழங்கிட கூட்டம் நிறைவு பெற்றது .

தலைவர் தன்னைக் “ கிறுக்கா ” என்று சொல்லி வாழ்த்த மாட்டாரா என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு . ஏனெனில்தலைவர் தனது இதயபூர்வமான அன்பை அந்தச்சொல் மூலமே வெளிப்படுத்துவார் .

by Swathi   on 03 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.