இசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎண்ட்ரி ஆன எஸ்.ஜே.சூர்யா அப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா அனிமேஷன் படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டில் வெளியான ஆல்வின் அண்ட் சிப்மங்ஸ் பாணியில் அடுத்த படம் எடுக்க உள்ளார். அணில்களை வைத்து இசை கச்சேரி, அதை சுற்றிய கதையாக நகரும் பாணியிலான கதையாக இருக்கும் அப்படத்தின் சாயலின் இந்த படமும் இருக்கும் என தெரிகிறது. மேலும் இப்படத்திற்கும் இசை எஸ்.ஜே.சூர்யா தான் என கிசுகிசுக்கப்படுகிறது.
எனினும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|