LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

சமூக விழிப்புணர்வு கவிதை - கவிப்புயல் இனியவன்

சமூக தளங்கள் ........

சமூகத்தை சீர் படுத்தும் ......

தளங்களாக இருக்கவேண்டும் .....

சீரழிக்கும் தளங்களாக.......

தளங்களாக இருக்க கூடாது ......!!!
 

இராணுவ  புரட்சி மூலம்.....

ஆட்சியை மாற்ற இருந்தவர்களை.....

சமூகதள தகவல் மூலம் மக்கள்.....

புரட்சி வெடித்து இராணுவ புரட்சி.....

தோற்கடிக்கப்பட்டற்கு சமூக தள.....

செய்தி பரிமாற்றம் உதவியதை.....

யாரும் மறந்திடமாட்டார்கள்.........!!!

தலைவன் இல்லாமல் தம் இன.....

பண்பாட்டை இளைஞர் போராட்டமாய்.....

போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு......

போராட்டம் சமூக தள பரிமாற்றம்.....

உலகையே திரும்பி பார்க்கவைத்து......

உலக புரட்சியின் புதிய பரிமாற்றத்தை.....

படைத்தது சமூக தள ஆயுதம்........!!!

 

மறுபுறத்தில் வேதனையான .......

சகிக்க முடியாத தகவல் பரிமாற்றம்.........

நடைபெற்றுகொண்டிருப்பதும் ........

மறுப்பதற்கில்லை.........

தனிப்பட்ட பகைமைக்கும்.........

விருப்பு வெறுப்புக்கும் சமூகதளம்......

பயன்படுவது வேதனை அளிக்கிறது.........!!!

 
எங்கோ நடைபெற்ற நிகழ்வை.......

திரித்து கூறுதல் பொருத்தமற்ற......

ஊகங்களை மக்கள் மத்தியில்......

பரப்புதல் ஒருவகை சமூக குற்றமே......

உண்மையை பலமுறை சொல்லுங்கள்.....

அது சமூகத்தின் தேவைப்படுகள்.....

பொய்யை பலமுறை கூறி உண்மை.....

ஆக்காதீர்கள் அது சமூக விரோதம்.....!!!

 
இன்னும் பல சமூக அவலமுண்டு.......

அதற்கும் போராட்ட தேவையுண்டு......

தப்பான தகவல்களை பரப்பினால்......

உங்கள் உண்மையான தேவைக்கு......

சமூகம் முன் வர தயங்கும்..........

எந்த ஒரு ஆயுதத்தையும் உண்மைக்காக.......

பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றியுண்டு....

சிலவேளை தோற்றலும் வரலாறு ஆகும்......!!!

 
நம் கையில் ஆயுதம் இருக்கிறது......

என்பதற்காக எப்படியும் பயன்படுத்தலாம்.......

எப்போதும் பயன்படுத்தலாம் என்ற......

எண்ணம் மாறவேண்டும் உண்மைக்கு......

பயன்படுத்துவோம் தொடர் வெற்றியை.....

பெறுவோம்...............................!!!


கவிப்புயல் இனியவன்

by Swathi   on 07 Feb 2017  1 Comments
Tags: விழிப்புணர்வு கவிதை   சமூக விழிப்புணர்வு கவிதை   Social Awareness   Social Awareness Kavithai           
 தொடர்புடையவை-Related Articles
சமூக விழிப்புணர்வு கவிதை - கவிப்புயல் இனியவன் சமூக விழிப்புணர்வு கவிதை - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
13-Feb-2017 00:55:29 ராஜிக் said : Report Abuse
அருமை ,,,வாழ்த்துக்கள் ...!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.