இலதெனின் உளதென்று உள்ளமொடு விதித்தும் சொல்லா நிலைபெறும் சூளுறின் மயங்கிச் செய்குறிக் குணனும் சிந்தையுள் திரிவும் உழைநின் றறிந்து பழங்கண் கவர்ந்தும் கண்எதிர் வைகி முகன்கொளின் கலங்கியும் (5)
வழங்குறு கிளவியின் திசைஎன மாழ்கியும் ஒருதிசை நோக்கினும் இருக்கினும் உடைந்தும் போக்கென உழையர் அயர்ப்பிடைக் கிளப்பினும் முலைகுவட்டு ஒழுக்கிய அருவிதண் தரளம் செம்மணி கரிந்து தீத்தர உயிர்த்தும் (10)
போமென வாய்ச்சொல் கேட்பினும் புகைந்தும் கொள்ளார் அறுதியும் கொண்டோர் இசைத்தலும் ஈதெனக் காட்டிய மயல்மட வரற்கு முன்னொரு வணிகன் மகப்பேறு இன்மையின் மருமான் தன்னை மகவெனச் சடங்குசெய்து (15)
உள்ளமும் கரணமும் அவனுழி ஒருக்கி முக்கவர்த் திருநதி துணையுடன் மூழ்கி அப்புலத் துயிர்கொடுத்து அருட்பொருள் கொண்டபின் மற்றவன் தாயம் வவ்வுறு மாக்கள் காணி கைக்கொண்ட மறுநிலை மைந்தனை (20)
நிரைத்துக் கிளைகொள் நெடுவழக்கு உய்த்தலும் மைந்தனும் கேளிரும் மதிமுடிக் கடவுள்நின் புந்தியொன் றிற்றிப் புகல்இலம் என்றயர் அவ்வுழி ஒருசார் அவன்மா துலனென அறிவொளி நிறைவே ஓருருத் தரிந்துவந்து (25)
அருள்வழக் கேறி அவர்வழக் குடைத்த கூடல் நாயகன் தாள்பணி யாரென எவ்வழிக் கிளவியின் கூறிச் செவ்விதின் செல்லும் திறன்இனி யானே. (29)
|