|
||||||||
சூழ்நிலைக்கேற்ற சொற்பொழிவு |
||||||||
அலங்கார நடையில்பேசுவது மட்டுமல்ல . அவசியமானதைப் பேசுவதும் சிறந்த சொற்பொழிவுதான் . சிலர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பார்கள் . பிரமுகர் ஒருவரை அந்த ஊர்ப் பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார்கள் . “ உங்கள் ஊருக்குப் பள்ளிக்கூடம் வந்துவிட்டது பாராட்டுக்குரியது . நீங்கள் எல்லோரும் இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ” என்று பேசினார் . ஆனால் ஓர் ஊரில் பைத்தியக்கார ஆஸ்பத்திரி திறப்பு விழாவிற்கு அதே பிரமுகரை அழைத்திருந்தார்கள் . “ இந்த ஊருக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரி வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது . நீங்கள் எல்லோரும் இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ” என்று பேசியபோது கூட்டத்தினர் திகைத்துவிட்டனர் . சூழ்நிலைக்கேற்றவாறு சுருக்கமாகவும் , சுருக்கென்றும் பேசக்கூடியவர் காமராசர் . மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தமிழக முதலமைச்சராய் இருந்தபோது மதுரையில் டி . வி . எஸ் நிறுவன கட்டிடத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் . அந்த விழாவில் காமராசரும் கலந்து கொண்டார் . ராஜாஜி அவர்கள் பேசும்போது , “ ஸ்ரீமான் டி . வி . சுந்தரம் அய்யங்கார் தாம் வயோதிகம் அடைந்த பின் தொழிலைத் தமது புதல்வரிடம் ஒப்படைத்து விட்டார் . இளைஞர்களிடம் இப்படி பொறுப்பை ஒப்படைப்பது பாராட்டுக்குரியது ” என்று குறிப்பிட்டார் . பின்னர் பேசிய காமராசர் இவ்வாறு குறிப்பிட்டார் . “ வயதானவர்கள் இளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று இராஜாஜி கூறியதை நானும் வரவேற்கிறேன் . தொழில் வர்த்தகத்துறைகளில் மட்டுமல்ல . அரசியலிலும் கூட வயோதிகர்கள் அந்த வழியைப் பின்பற்றினால் நாட்டுக்கு நன்மை உண்டு .” இதைக் கேட்டதும் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியில் கை தட்டி ஆரவாரம் செய்தனர் . ஒரு முறை சேலம் மாட்டம் ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடந்து கொண்டிருந்தது . பெருந்திரளாகக் கூடியிருந்த பெண்கள் பகுதியில் பேச்சு சத்தம் அதிகமாக இருந்தது . அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தும் பயன் இல்லை . காமராசர் கூட்டத்துக்கு வந்த பிறகும் இந்த நிலை நீடித்தது . காமராசர் கைமக் முன் சென்று “ தாய்மார்களே ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்கு தெரிஞ்சவங்களையெல்லாம் சந்திக்கிறீங்கன்னு நெனைக்கிறேன் . அதனால நீங்களெல்லாம் உங்கள் பிரச்சினைகளைப் பேசி முடியுங்கள் . அதற்குப் பிறகு மாநாட்டை நடத்திக் கொள்வோம் ” என்றார் . பெண்கள் பகுதியில் பேச்சு சத்தம் கப்சிப் என்று அடங்கியது . சொற்கள் நமது சிந்தனைகளின் உடைகள் , அவைகளை கந்தல்களாகவும் , கிழிசல்களாகவும் அழுக்காகவும் அணியக் கூடாது .
|
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|