LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

சூழ்நிலைக்கேற்ற சொற்பொழிவு

அலங்கார நடையில்பேசுவது மட்டுமல்ல . அவசியமானதைப் பேசுவதும் சிறந்த சொற்பொழிவுதான் . சிலர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பார்கள் . பிரமுகர் ஒருவரை அந்த ஊர்ப் பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார்கள் . “ உங்கள் ஊருக்குப் பள்ளிக்கூடம் வந்துவிட்டது பாராட்டுக்குரியது . நீங்கள் எல்லோரும் இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ” என்று பேசினார் . ஆனால் ஓர் ஊரில் பைத்தியக்கார ஆஸ்பத்திரி திறப்பு விழாவிற்கு அதே பிரமுகரை அழைத்திருந்தார்கள் . “ இந்த ஊருக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரி வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது . நீங்கள் எல்லோரும் இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ” என்று பேசியபோது கூட்டத்தினர் திகைத்துவிட்டனர் .

சூழ்நிலைக்கேற்றவாறு சுருக்கமாகவும் , சுருக்கென்றும் பேசக்கூடியவர் காமராசர் . மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தமிழக முதலமைச்சராய் இருந்தபோது மதுரையில் டி . வி . எஸ் நிறுவன கட்டிடத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் . அந்த விழாவில் காமராசரும் கலந்து கொண்டார் . ராஜாஜி அவர்கள் பேசும்போது , “ ஸ்ரீமான் டி . வி . சுந்தரம் அய்யங்கார் தாம் வயோதிகம் அடைந்த பின் தொழிலைத் தமது புதல்வரிடம் ஒப்படைத்து விட்டார் . இளைஞர்களிடம் இப்படி பொறுப்பை ஒப்படைப்பது பாராட்டுக்குரியது ” என்று குறிப்பிட்டார் . பின்னர் பேசிய காமராசர் இவ்வாறு குறிப்பிட்டார் . “ வயதானவர்கள் இளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று இராஜாஜி கூறியதை நானும் வரவேற்கிறேன் . தொழில் வர்த்தகத்துறைகளில் மட்டுமல்ல . அரசியலிலும் கூட வயோதிகர்கள் அந்த வழியைப் பின்பற்றினால் நாட்டுக்கு நன்மை உண்டு .” இதைக் கேட்டதும் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியில் கை தட்டி ஆரவாரம் செய்தனர் .

ஒரு முறை சேலம் மாட்டம் ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடந்து கொண்டிருந்தது . பெருந்திரளாகக் கூடியிருந்த பெண்கள் பகுதியில் பேச்சு சத்தம் அதிகமாக இருந்தது . அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தும் பயன் இல்லை . காமராசர் கூட்டத்துக்கு வந்த பிறகும் இந்த நிலை நீடித்தது . காமராசர் கைமக் முன் சென்று “ தாய்மார்களே ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்கு தெரிஞ்சவங்களையெல்லாம் சந்திக்கிறீங்கன்னு நெனைக்கிறேன் . அதனால நீங்களெல்லாம் உங்கள் பிரச்சினைகளைப் பேசி முடியுங்கள் . அதற்குப் பிறகு மாநாட்டை நடத்திக் கொள்வோம் ” என்றார் . பெண்கள் பகுதியில் பேச்சு சத்தம் கப்சிப் என்று அடங்கியது .

சொற்கள் நமது சிந்தனைகளின் உடைகள் , அவைகளை கந்தல்களாகவும் , கிழிசல்களாகவும் அழுக்காகவும் அணியக் கூடாது .

 

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.