சீனாவின் லுஷான் மாவட்டத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 189 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7 ஆகா பதிவான இந்த நிலநடுக்கத்தால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் தரைமட்டமானதாகவும், இடிபாடுகளை அகற்றும் பணி துரித வேகத்தில் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அடிப்படை தேவைகளை வழங்க அந்நாட்டு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
|