LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், சென்னையில் தொடங்கி வைத்தார்.

ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல  வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் அரசு துறைகளில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டு விடுகிறது.  ஆனால் கிரிமினல், ஊழல், லஞ்சம் வழக்கில் தண்டிக்கப்படும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள்  பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டு அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும் என்று சட்ட விதிகள் உள்னன. இதனை நீக்கி, தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை  விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாநிலம் முழுவதும், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உறுதி  அளித்தது.

கடந்த 2014 -ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் எம்பி, எம்.எல்.ஏகள் மீதான 1,581 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தொடர்பான கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி (2 நீதிமன்றங்கள்), கேரளா, மத்தியப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய 11 மாநிலங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால்  தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இந்த நீதிமன்றங்கள் செயல்படாமல் இருந்தது.

சென்னை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலர் மாளிகையில், எம்.எல்.ஏ, எம்.பி.,கள் மீதான குற்றவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் முரளிதரன், ஜெகதீஸ் சந்திரா ஆகியோரும் கலந்து கொண்டனர். சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஜெ.சாந்தி  நியமிக்கப்பட்டு உள்ளார்.

by Mani Bharathi   on 21 Sep 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
30-Sep-2018 15:58:08 கே.வராகாகிரி said : Report Abuse
சட்டங்கள் எல்லாம் எட்டில்தான் உள்ளது மாத சம்பளம் பெரும் சட்டம் தெரியாத தர்மம் தெரியாத மக்களின் நிலை அறியாத அதிகரிகளால் லஞ்சம் பெருத்துள்ளது தவிர மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை நீதிமன்றம் செல்வதை விட சாவது மேல் நீதி பேரால் நிதி சேர்ப்பவர்கள் நீதி தேவதையை விற்றுக்கொண்டுள்ளார்கள் வசதி உள்ளவர்களுக்கு வளையும் நீதி ஏழைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது இது கருத்தல்ல கடந்துவந்த பாதை -சட்டதை பின்பற்ற முடியாத நீதிபதிகள் -மக்களின் நிலையறியாத அரசியல் தலைவர்கள் -வரி வருவாயீல் 80 % சம்பளமாக வங்கியும் கடமையை செய்யாத அதிகாரிகள் எங்கே நாயம் எங்கே தர்மம் எல்லாம் பணம் பணம்
 
29-Sep-2018 15:28:59 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். இது ஒரு நல்ல முன்னுதாரனம்.நீதியின் முன் அனைவரும் சமமானவர்களே. ஆனால் தற்போதய மாசுகட்டுப்பாட்டு வாரியம், லஞ்ச ஒழிப்புத்துறை போன்று இதுவும் இருந்து விடக்கூடாது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.