LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வளைகுடா நாடுகள்

சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்குச் சிறப்பு மரியாதை!

பிரதமர் மோடி சவுதி, அரேபியா வரும்படி அந்நாட்டு இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார்.

வெளிநாட்டுத் தலைவர்களின் வருகையின்போது, விமானநிலையத்தில் அந்நாட்டு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்த விமானத்துக்கு சவுதி போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து ஜெட்டா நகருக்கு அழைத்துச் சென்றன. சவுதி அரேபியாவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளதால், பிரதமர் மோடிக்கு இந்த அரியவகை சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாகப் பேசிய பிரதமர்  மோடி,  "சவுதி அரேபியா இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகளில் ஒன்று. இந்தியா - சவுதி அரேபியா இடையிலான உறவு அளவற்ற ஆற்றலுடையது. இது மேலும் வலுவடைய வேண்டும் என விரும்பும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தொலைநோக்குப் பார்வையுடையவர். விஷன் 2030 என்ற தலைப்பின் கீழ் அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் உலகளாவிய பாராட்டைப் பெற்றது.

நான் சவுதி இளவரசரைச் சந்திக்கும்போதெல்லாம், அவர் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது அறிவு, முற்போக்குச் சிந்தனை, மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் ஆர்வம் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவுடனான இந்திய உறவை நான் பெருமையாகக் கருதுகிறேன். எங்கள் உறவு புதிதல்ல. இரு நாடுகள் இடையேயான கலாச்சாரப் பரிமாற்றம் நூற்றாண்டுகள் பழமையானது. அனைத்துத் துறைகளிலும், இரு நாடுகள் இடையே நீண்ட நெடிய தொடர்பு உள்ளது.

டெல்லியில் கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்தியக் கிழக்கு - ஐரோப்பா வர்த்தக வழித்தடம் (ஐஎம்இஇசி) வரும்காலங்களில் அனைத்துத் துறைகளிலும் இணைப்பை ஏற்படுத்தும். இது ஒட்டுமொத்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இந்த வழித்தடம் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளை ஒருங்கிணைக்கும்..." என்றார். 


by hemavathi   on 23 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்பினால்  இனி 5% வரி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்பினால் இனி 5% வரி
3% பணியாளர்களைப் பணி நீக்கம் செய்த  மைக்ரோசாப்ட் 3% பணியாளர்களைப் பணி நீக்கம் செய்த மைக்ரோசாப்ட்
ஹாங்காங், சிங்கப்பூரை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- காரணம் என்ன? ஹாங்காங், சிங்கப்பூரை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- காரணம் என்ன?
பகவத்கீதையை சாட்சியாக வைத்துப் பதவியேற்ற கனடா அமைச்சர்  அனிதா ஆனந்த் பகவத்கீதையை சாட்சியாக வைத்துப் பதவியேற்ற கனடா அமைச்சர் அனிதா ஆனந்த்
2-வது முறை இங்கிலாந்து நாட்டின் ஏம்ஸ்பரி நகர கவுன்சில் மாநகர மேயரானார்  சாருலதா மோனிகா 2-வது முறை இங்கிலாந்து நாட்டின் ஏம்ஸ்பரி நகர கவுன்சில் மாநகர மேயரானார் சாருலதா மோனிகா
கனடா பிரம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கனடா பிரம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் 19வது ஆண்டு 'சிவத்தமிழ் விழா'! ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் 19வது ஆண்டு 'சிவத்தமிழ் விழா'!
சிங்கப்பூர் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 14வது முறையாக வெற்றி சிங்கப்பூர் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 14வது முறையாக வெற்றி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.