தேவையானவை :
கடலைப் பருப்பு - 1 கப் உளுந்து - 1 கப் முளைக்கீரை - 1 கட்டு பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது மிளகு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) எண்ணெய் - தேவையானளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. ஒரு மணி நேரம் கடலைப் பருப்பையும் உளுந்தையும் தண்ணீரில் ஊற வைத்து ஆட்டிக் கொள்ள வேண்டும்.
2. பின்னர் இதனுடன் நறுக்கிய கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். 3. எண்ணையை காயவைத்து சிறு வடைகளாக தட்டி போடவேண்டும்.
4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும். இப்பொழுது சுவையான கீரை வடை தயார் .
|