LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஆன்மீகத் தமிழர்கள் Print Friendly and PDF

சித்பவானந்தர்

 

பிறப்பு:தமிழ்நாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செங்குட்டைப்பாளையம் என்ற கிராமத்தில் பி. கே. பெரியண்ணக் கவுண்டர், நஞ்சம்மையார் 
ஆகியோருக்கு மகனாக சிபவானந்தர் பிறந்தார். இயற்பெயர் சின்னுக்கவுண்டர். ஆத்துப் பொள்ளாச்சி கிராமப் பள்ளியிலும், பொள்ளாச்சி கிராமப்பள்ளியிலும் 
ஆரம்பக்கல்வி கற்றார். கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெற்றார். "சென்னை சொற்பொழிவுகள்":இக்காலகட்டத்தில் 
பொள்ளாச்சிக்கு வந்த பழனி சாது சுவாமிகள் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. பழனிக்குச் சென்று வர ஆரம்பித்தார். சட்டி சுவாமிகள் அறிமுகமும் 
வாய்த்தது. 1918-இல் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் சென்னை மாகாணத்தில் 7-ஆம் இடம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் எஃப்.ஏ. வகுப்பில் 
சேர்ந்தார்.மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லும் நிலையில் சுவாமி விவேகானந்தரது "சென்னை சொற்பொழிவுகள்" என்ற நூலின் ஒரு கட்டுரையால் 
கவரப்பட்டு பயணத்தை நிறுத்தினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படித்தார். அப்போது விக்டோரியா விடுதியில் தி. சு. அவிநாசிலிங்கம் 
செட்டியார் அவர்களுடன் தோழர் ஆனார். இருவரும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர், ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தர் 
ஆகியோரின் அறிமுகம் பெற்றனர்.பிரம்மச்சரிய தீட்சை:1923-ல் இளங்கலை படிப்பை முடித்ததும் அகிலானந்த சுவாமிகளுடன் புவனேஸ்வரம் ஸ்ரீ 
ராமகிருஷ்ண மடம் சென்று சுவாமி சிவானந்தரிடம் பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். திரையம்பக சைதன்யர் என்ற பெயருடன் அங்கே இருந்தார். சுவாமி 
சிவானந்தரின் அனுமதி பெற்றுத் தென்னாட்டில் பயணம்செய்த சேரன் மகாதேவியில் தேச பக்தர் வ. வே. சு. ஐயரைச் சந்தித்தார்.1924 சூன் மாதம் சலவைத் 
தொழிலாளி ஒருவர் அளித்த நிலத்தில் சுவாமி சிவானந்தர் ஊட்டி ஆசிரமத்திற்கு அடிக்கல் நாட்டினார். திரையம்பக சைதன்யரின் குடும்பம் ஆசிரமம் 
அமைக்க உதவி செய்தனர். 1926 சூலை 25 இல் சுவாமி சிவானந்தர் சந்நியாச தீட்சை வழங்கி சுவாமி சித்பவானந்தர் என்று பெயரிட்டார்.ஸ்ரீ ராமகிருஷ்ண 
மடம்:1930 முதல் 1940 வரை உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தார். அப்போது காந்தியடிகள், நாராயணகுரு ஆகியோர் அங்கே வருகை 
புரிந்தார்கள். சிவானந்தரின் சமாதியடைந்த பின்னர் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து விலகி கைலாய யாத்திரை ஒன்றை மேற்கொண்டார்.
திருச்சி அருகே திருப்பராய்த்துறைக்குச் சென்ற சித்பவானந்தர் தாருகாவனேசுவரர் கோயிலில் 1940 ஆம் ஆண்டில் நடந்த குடமுழுக்கு விழாவில் 
பங்கேற்றார். அதை நடத்திய ராமநாதன் செட்டியார், கானாடுகாத்தான் அருணாச்சலம் செட்டியார் ஆகியோருடன் சந்திப்பு ஏற்பட்டது. திருப்பராய்த்துறையில் 
தங்க முடிவெடுத்தார். நூற்றுக்கால் மண்டபத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் வாரம் 
ஒருமுறை தாயுமானவர் பாடலுக்கு விளக்கம் அளித்தார்.தர்ம சக்கரம்:1942-ல் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவினார். குருகுல 
முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப் பள்ளி மற்றும் விவேகானந்த மாணவர் விடுதி ஆகியவற்றை தொடங்கினார். உள்ளூர் மாணவர்களுக்காக 
திருப்பராய்த்துறையில் நடுநிலைப் பள்ளி தொடங்கினார். 1951 ல்தர்ம சக்கரம் மாத இதழை ஆரம்பித்தார். தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களை 
ஆரம்பித்தார்.இறப்பு:1985 நவம்பர் 16 ஆம் தேதி மரணம் அடைந்தார்.அவரது சமாதி திருப்பராய்த்துறையில் உள்ளது.

பிறப்பு:

 

     தமிழ்நாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செங்குட்டைப்பாளையம் என்ற கிராமத்தில் பி. கே. பெரியண்ணக் கவுண்டர், நஞ்சம்மையார் ஆகியோருக்கு மகனாக சிபவானந்தர் பிறந்தார். இயற்பெயர் சின்னுக்கவுண்டர். ஆத்துப் பொள்ளாச்சி கிராமப் பள்ளியிலும், பொள்ளாச்சி கிராமப்பள்ளியிலும் ஆரம்பக்கல்வி கற்றார். கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெற்றார்.

 

"சென்னை சொற்பொழிவுகள்":

 

     இக்காலகட்டத்தில் பொள்ளாச்சிக்கு வந்த பழனி சாது சுவாமிகள் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. பழனிக்குச் சென்று வர ஆரம்பித்தார். சட்டி சுவாமிகள் அறிமுகமும் வாய்த்தது. 1918-இல் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் சென்னை மாகாணத்தில் 7-ஆம் இடம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் எஃப்.ஏ. வகுப்பில் சேர்ந்தார்.மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லும் நிலையில் சுவாமி விவேகானந்தரது "சென்னை சொற்பொழிவுகள்" என்ற நூலின் ஒரு கட்டுரையால் கவரப்பட்டு பயணத்தை நிறுத்தினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படித்தார். அப்போது விக்டோரியா விடுதியில் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களுடன் தோழர் ஆனார். இருவரும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர், ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தர் ஆகியோரின் அறிமுகம் பெற்றனர்.

 

பிரம்மச்சரிய தீட்சை:

 

     1923-ல் இளங்கலை படிப்பை முடித்ததும் அகிலானந்த சுவாமிகளுடன் புவனேஸ்வரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்று சுவாமி சிவானந்தரிடம் பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். திரையம்பக சைதன்யர் என்ற பெயருடன் அங்கே இருந்தார். சுவாமி சிவானந்தரின் அனுமதி பெற்றுத் தென்னாட்டில் பயணம்செய்த சேரன் மகாதேவியில் தேச பக்தர் வ. வே. சு. ஐயரைச் சந்தித்தார்.1924 சூன் மாதம் சலவைத் தொழிலாளி ஒருவர் அளித்த நிலத்தில் சுவாமி சிவானந்தர் ஊட்டி ஆசிரமத்திற்கு அடிக்கல் நாட்டினார். திரையம்பக சைதன்யரின் குடும்பம் ஆசிரமம் அமைக்க உதவி செய்தனர். 1926 சூலை 25 இல் சுவாமி சிவானந்தர் சந்நியாச தீட்சை வழங்கி சுவாமி சித்பவானந்தர் என்று பெயரிட்டார்.

 

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்:

 

     1930 முதல் 1940 வரை உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தார். அப்போது காந்தியடிகள், நாராயணகுரு ஆகியோர் அங்கே வருகை புரிந்தார்கள். சிவானந்தரின் சமாதியடைந்த பின்னர் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து விலகி கைலாய யாத்திரை ஒன்றை மேற்கொண்டார்.திருச்சி அருகே திருப்பராய்த்துறைக்குச் சென்ற சித்பவானந்தர் தாருகாவனேசுவரர் கோயிலில் 1940 ஆம் ஆண்டில் நடந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார். அதை நடத்திய ராமநாதன் செட்டியார், கானாடுகாத்தான் அருணாச்சலம் செட்டியார் ஆகியோருடன் சந்திப்பு ஏற்பட்டது. திருப்பராய்த்துறையில் தங்க முடிவெடுத்தார். நூற்றுக்கால் மண்டபத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் வாரம் ஒருமுறை தாயுமானவர் பாடலுக்கு விளக்கம் அளித்தார்.

 

தர்ம சக்கரம்:

 

     1942-ல் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவினார். குருகுல முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப் பள்ளி மற்றும் விவேகானந்த மாணவர் விடுதி ஆகியவற்றை தொடங்கினார். உள்ளூர் மாணவர்களுக்காக திருப்பராய்த்துறையில் நடுநிலைப் பள்ளி தொடங்கினார்.1951 ல்தர்ம சக்கரம் மாத இதழை ஆரம்பித்தார். தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்.

 

இறப்பு:

 

     1985 நவம்பர் 16 ஆம் தேதி மரணம் அடைந்தார்.அவரது சமாதி திருப்பராய்த்துறையில் உள்ளது.

by Swathi   on 23 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி. திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி.
திருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார்
தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை
தங்கம்மா அப்பாக்குட்டி தங்கம்மா அப்பாக்குட்டி
பத்திரகிரியார் பத்திரகிரியார்
முரளீதர சுவாமிகள் முரளீதர சுவாமிகள்
முகவை கண்ண முருகனார் முகவை கண்ண முருகனார்
மத்துவர் மத்துவர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.