ஒலிம்பிக், ஆண்கள் துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் rapid fire pistol பிரிவில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்துள்ளது.இறுதிப் போட்டியின் போது கியூபா வீரர் லியூரிஸ் புபோ, விஜய் குமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் பிரகாசித்த கியூபா வீரர் மொத்தம் 34 புள்ளிகளுடன் உலக சாதனையை சமன் செய்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். விஜய் குமார் 30 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக்சில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.
|