ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகளில் 2009-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் சார்ஜர் அணி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. டெக்கான் அணி தனது பங்குகளை வங்கியிடம் அடமானம் வைத்துள்ளது என்பதே டெக்கானின் தற்போதைய நிலை. மேலும் வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளது. வீரர்களுக்கான பணத்தை கொடுக்கவும், நிதி நெருக்கடி பிரச்சினையில் இருந்து மீளவும் டெக்கான் அணிக்கு கடந்த 31-ந்தேதி வரை கிரிக்கெட் வாரியம் காலக்கெடு அளித்தது. ஆனாலும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. இதைத் தொடர்ந்து வருகிற 15-ந்தேதி வரை மேலும் அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே டெக்கான் அணி விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியம் நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் டெக்கான் அணியை மறு விற்பனை செய்ய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
|