புதுடில்லி : கிரிக்கெட் போட்டிகளில் துணிச்சலாக அடித்து ஆடும் வீரர்களில் சேவக்கே முதன்மையானவர் முதல் பந்தை சந்திக்கும் போது அவருக்கும் பதட்டமாக தான் இருக்குமாம். இந்திய அணியின் துவக்க வீரர் சேவக், அதிரடி ஆட்டத்தில் கில்லாடியான இவர், பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விடுவது வழக்கமான ஒன்று தான். இவரும் களத்தில் சிறிது பதட்டத்துடனேயே விளையாடுவாராம். இதுகுறித்து சேவக் நிருபர்களிடம் கூறியது, ஒவ்வொரு போட்டியிலும் முதல் பந்தை சந்திக்கும் போது மனதில் லேசான நடுக்கம் இருக்கும். ஆனால் இதனை ஒருபோதும் வெளிப்படுத்தியது கிடையாது. ஏனெனில் அது எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடும். இதனால் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து, எனது விக்கெட்டை விரைவில் கைப்பற்றிவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் பந்தை எதிர்கொள்ளும் போது, தன்னம்பிக்கையுடன் விளையாடுவதால், ஆரம்பம் முதல் அடித்து ஆட முடிகிறது என்று அவர் கூறினார்.
|