|
|||||
இந்தியாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது |
|||||
லண்டன், ஆக.1: ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரியும் (படம்) தோல்வி கண்டார். இதன்மூலம் வில்வித்தைப் போட்டியில்
இந்தியாவின் பதக்க வாய்ப்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. புதன்கிழமை நடைபெற்ற மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் தீபிகா குமாரி 2-6 என்ற கணக்கில்
பிரிட்டனின் ஆமி ஆலிவரிடம் தோல்வி கண்டார்.போட்டியின் முடிவில் இருவரும் தலா 104 புள்ளிகளைப் பெற்றிருந்தபோதிலும், 3 செட்களை வென்றதன்
மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பிரிட்டனின் ஆமி ஆலிவர். லார்ட்ஸ் மைதானத்தில் நிலவிய குளிர், தீபிகாவுக்கு பாதகமாக
அமைந்தது. இந்தியாவின் சார்பில் ஆடவர் பிரிவில் ஜெயந்தா தலுக்தார், ராகுல் பானர்ஜி, தருண்தீப் ராய் ஆகியோரும், மகளிர் பிரிவில் தீபிகா குமாரி, எல்.பி.
தேவி, செக்ரோவ்லு ஸ்வுரு ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களில் ராகுல் பானர்ஜி, தருண்தீப், எல்.பி.தேவி ஆகியோர் மட்டுமே அடுத்த சுற்றுவரை முன்னேறி
தோல்வி கண்டனர். மற்றவர்கள் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனர்.
லண்டன், ஆக.1:
ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரியும் தோல்வி கண்டார். இதன்மூலம் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. புதன்கிழமை நடைபெற்ற மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் தீபிகா குமாரி 2-6 என்ற கணக்கில் பிரிட்டனின் ஆமி ஆலிவரிடம் தோல்வி கண்டார்.போட்டியின் முடிவில் இருவரும் தலா 104 புள்ளிகளைப் பெற்றிருந்தபோதிலும், 3 செட்களை வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பிரிட்டனின் ஆமி ஆலிவர். லார்ட்ஸ் மைதானத்தில் நிலவிய குளிர், தீபிகாவுக்கு பாதகமாக அமைந்தது. இந்தியாவின் சார்பில் ஆடவர் பிரிவில் ஜெயந்தா தலுக்தார், ராகுல் பானர்ஜி, தருண்தீப் ராய் ஆகியோரும், மகளிர் பிரிவில் தீபிகா குமாரி, எல்.பி. தேவி, செக்ரோவ்லு ஸ்வுரு ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களில் ராகுல் பானர்ஜி, தருண்தீப், எல்.பி.தேவி ஆகியோர் மட்டுமே அடுத்த சுற்றுவரை முன்னேறி தோல்வி கண்டனர். மற்றவர்கள் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனர். |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|