மும்பை, ஆகஸ்ட் 17 : 20-20 உலக கோப்பையை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டிகளுக்கான புதிய சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. புதிய சீருடையின் இடது தோள் பகுதியில் இந்தியாவின் தேசியக் கொடியின் மூவண்ணம் இடம்பெற்றுள்ளது. புதிய சீருடை பார்ப்பதற்கு மிக அருமையாக உள்ளது. புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ள அதிரடி வீரர் யுவராஜ் சிங், புதிய சீருடை அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். முதல் போட்டியில் விளையாடுவதைப் போன்ற உணர்வுடன் இருப்பதாக கூறினார்.
|