|
|||||
வில்வித்தை-கொரிய வீரர் உலக சாதனை |
|||||
லண்டன்,ஜூலை 27: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை தரவரிசை நிர்ணய சுற்றில் (ரேங்கிங் ரவுண்டு)
கொரிய வீரர் இம்தோங் 720-க்கு 699 புள்ளிகளை எடுத்து தனது பழைய உலக சாதனையை (666) முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் முதல் உலக சாதனையைப் படைத்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அணி பிரிவில் கிம் பப்மின், ஜின் ஹியெக் ஆகியோருடன் இணைந்து அவர் பங்கேற்றார். இந்த அணி மொத்தம் 2087 புள்ளிகளைப் பெற்றது.
ஏதென்ஸ் மற்றும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரான இம்தோங், இடது கண்ணில் 10 சதவீத பார்வைத் திறனையும், வலது கண்ணில் 20
சதவீத பார்வைத் திறனையும் மட்டுமே கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு கடைசி இடம்: ஆடவர் தரவரிசை நிர்ணய சுற்றில் இந்திய அணிக்கு கடைசி இடமே (12-வது இடம்) கிடைத்தது. இந்த அணி 1969 புள்ளிகள்
மட்டுமே பெற்றது. தனி நபர் பிரிவில் தருண்தீப் ராய் 664 புள்ளிகள், ராகுல் பானர்ஜி 655 புள்ளிகள், ஜெயந்தா தலுக்தார் 650 புள்ளிகள் பெற்றனர்.
மகளிர் பிரிவு: மகளிர் பிரிவு தரவரிசை நிர்ணய சுற்றில் கொரிய அணி 1993 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இந்திய அணிக்கு 10-வது இடம் கிடைத்தது.
தனி நபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி 662 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும், எல்.பி.தேவி 651 புள்ளிகளுடன் 22-வது இடத்தையும், செக்ரோவ்லு ஸ்வுரு
625 புள்ளிகளுடன் 50-வது இடத்தையும் பிடித்தனர்.
லண்டன்,ஜூலை 27: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை தரவரிசை நிர்ணய சுற்றில் கொரிய வீரர் இம்தோங் 720-க்கு 699 புள்ளிகளை எடுத்து தனது பழைய உலக சாதனையை (666) முறியடித்து புதிய சாதனை படைத்தார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் முதல் உலக சாதனையைப் படைத்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார். அணி பிரிவில் கிம் பப்மின், ஜின் ஹியெக் ஆகியோருடன் இணைந்து அவர் பங்கேற்றார். இந்த அணி மொத்தம் 2087 புள்ளிகளைப் பெற்றது. ஏதென்ஸ் மற்றும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரான இம்தோங், இடது கண்ணில் 10 சதவீத பார்வைத் திறனையும், வலது கண்ணில் 20 சதவீத பார்வைத் திறனையும் மட்டுமே கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் தரவரிசை நிர்ணய சுற்றில் இந்திய அணிக்கு கடைசி இடமே 12-வது இடம் கிடைத்தது. இந்த அணி 1969 புள்ளிகள் மட்டுமே பெற்றது. தனி நபர் பிரிவில் தருண்தீப் ராய் 664 புள்ளிகள், ராகுல் பானர்ஜி 655 புள்ளிகள், ஜெயந்தா தலுக்தார் 650 புள்ளிகள் பெற்றனர். மகளிர் பிரிவு தரவரிசை நிர்ணய சுற்றில் கொரிய அணி 1993 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இந்திய அணிக்கு 10-வது இடம் கிடைத்தது. தனி நபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி 662 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும், எல்.பி.தேவி 651 புள்ளிகளுடன் 22-வது இடத்தையும், செக்ரோவ்லு ஸ்வுரு 625 புள்ளிகளுடன் 50-வது இடத்தையும் பிடித்தனர். |
|||||
by Swathi on 28 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|