LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

வில்வித்தை-கொரிய வீரர் உலக சாதனை

 

லண்டன்,ஜூலை 27: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை தரவரிசை நிர்ணய சுற்றில் (ரேங்கிங் ரவுண்டு) 
கொரிய வீரர் இம்தோங் 720-க்கு 699 புள்ளிகளை எடுத்து தனது பழைய உலக சாதனையை (666) முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
 இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் முதல் உலக சாதனையைப் படைத்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
 அணி பிரிவில் கிம் பப்மின், ஜின் ஹியெக் ஆகியோருடன் இணைந்து அவர் பங்கேற்றார். இந்த அணி மொத்தம் 2087 புள்ளிகளைப் பெற்றது.
 ஏதென்ஸ் மற்றும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரான இம்தோங், இடது கண்ணில் 10 சதவீத பார்வைத் திறனையும், வலது கண்ணில் 20 
சதவீத பார்வைத் திறனையும் மட்டுமே கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்தியாவுக்கு கடைசி இடம்: ஆடவர் தரவரிசை நிர்ணய சுற்றில் இந்திய அணிக்கு கடைசி இடமே (12-வது இடம்) கிடைத்தது. இந்த அணி 1969 புள்ளிகள் 
மட்டுமே பெற்றது. தனி நபர் பிரிவில் தருண்தீப் ராய் 664 புள்ளிகள், ராகுல் பானர்ஜி 655 புள்ளிகள், ஜெயந்தா தலுக்தார் 650 புள்ளிகள் பெற்றனர்.
 மகளிர் பிரிவு: மகளிர் பிரிவு தரவரிசை நிர்ணய சுற்றில் கொரிய அணி 1993 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இந்திய அணிக்கு 10-வது இடம் கிடைத்தது.
 தனி நபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி 662 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும், எல்.பி.தேவி 651 புள்ளிகளுடன் 22-வது இடத்தையும், செக்ரோவ்லு ஸ்வுரு 
625 புள்ளிகளுடன் 50-வது இடத்தையும் பிடித்தனர்.

லண்டன்,ஜூலை 27:

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை தரவரிசை நிர்ணய சுற்றில் கொரிய வீரர் இம்தோங் 720-க்கு 699 புள்ளிகளை எடுத்து தனது பழைய உலக சாதனையை (666) முறியடித்து புதிய சாதனை படைத்தார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் முதல் உலக சாதனையைப் படைத்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.  அணி பிரிவில் கிம் பப்மின், ஜின் ஹியெக் ஆகியோருடன் இணைந்து அவர் பங்கேற்றார்.

இந்த அணி மொத்தம் 2087 புள்ளிகளைப் பெற்றது. ஏதென்ஸ் மற்றும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரான இம்தோங், இடது கண்ணில் 10 சதவீத பார்வைத் திறனையும், வலது கண்ணில் 20 சதவீத பார்வைத் திறனையும் மட்டுமே கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் தரவரிசை நிர்ணய சுற்றில் இந்திய அணிக்கு கடைசி இடமே 12-வது இடம் கிடைத்தது.

இந்த அணி 1969 புள்ளிகள் மட்டுமே பெற்றது. தனி நபர் பிரிவில் தருண்தீப் ராய் 664 புள்ளிகள், ராகுல் பானர்ஜி 655 புள்ளிகள், ஜெயந்தா தலுக்தார் 650 புள்ளிகள் பெற்றனர். மகளிர் பிரிவு தரவரிசை நிர்ணய சுற்றில் கொரிய அணி 1993 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இந்திய அணிக்கு 10-வது இடம் கிடைத்தது. தனி நபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி 662 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும், எல்.பி.தேவி 651 புள்ளிகளுடன் 22-வது இடத்தையும், செக்ரோவ்லு ஸ்வுரு 625 புள்ளிகளுடன் 50-வது இடத்தையும் பிடித்தனர்.

by Swathi   on 28 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.