டவுன்ஸ்வில்லே : ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில்லே நகரில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இளைஞர் கிரிக்கெட்டில் நியூசிலாந்தை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி பைனலில் நுழைந்தது. தமிழகத்தைச் சேர்ந்த அபராஜித், இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருது பெற்றார். கால் இறுதிப்போட்டியில், பரம எதிரி அணியான பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
|