லட்சுமணனின் திடீர் ஓய்வுக்கு காரணம் கிரிக்கெட் போர்டு நடந்து கொண்ட விதமே காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், ஓய்வு முடிவை அவர் அறிவித்தபோது, இதைப்பற்றி எதையுமே அவர் கூறாதது, பொறுப்புமிக்க லட்சுமணின் நல்ல மனதைதான் காட்டுகிறது. தேர்வுக்குழுவின் தலைவர் ஸ்ரீகாந்தும் இதேபோல் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். தேர்வுக் குழுவினர் லட்சுமண்னை, டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுத்தபோது, குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், ‘‘இதுவே உங்களுக்கு ஓய்வு அளிக்கப்போகும் டெஸ்ட்டாக இருக்கலாம்’’ என்று கிண்டலாக கூறியதாக தெரிகிறது. இதுவே லட்சுமண் மனதை மிக புண்படுத்தியதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.
|