சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழமெங்கும் மாணவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். மன்னார்குடி, ராஜகோபாலசாமி அரசுக் கலைக் கல்லூரியின் 40 மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள், நேற்று வகுப்புகளைப் புறக்கணித்ததோடு, ஸ்டேட் வங்கிக்குள் புகுந்து கொண்டு கதவுகளைப் பூட்டி கொண்டும் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
|