LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம்

“எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்லும்
எனது ஆருயிர்த் தலைவரே; இம்முறை
ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?

என் உணர்வில், உடலில், இரத்தத்தில்,
சிந்தனையில், இதயத்தில், இரண்டறக் கழந்துவிட்ட
தலைவா! எங்களையெல்லாம், இங்கேயே
ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?

“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ
ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று உங்கள் 
நினைவிடத்தில் எழுத வேண்டுமென்று 
33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். 
இந்தத் தமிழ் சமூகத்துக்காக
இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன்
புறப்பட்டுவிட்டீர்களா?

95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன்
சளைக்காமல் ஓடி, ‘நாம் தாண்டிய உயரத்தை
யார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்டி
வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?

திருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்த நாளாம்
சூன் 3ஆம் நாள் நான் பேசும் போது, ‘உங்கள்
சக்தியில் பாதியைத் தாருங்கள்’ என்றேன். அந்தச் சக்தியையும்
பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற
இதயத்தையும் யாசிக்கிறேன்;
தருவீர்களா தலைவரே!

அந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத
உங்கள் கனவுகளையும், லட்சியங்களையும்,
வென்று காட்டுவோம்!

கோடானுகோடி உடன்பிறப்புக்கள் இதயத்திலிருந்து
ஒரு வேண்டுகோள்... ஒரே ஒருமுறை...

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!” என்று
சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு
நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு
இயங்க வைத்திடுமே!

“அப்பா அப்பா” என்பதைவிட, “தலைவரே தலைவரே”
என நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம்.
அதனால் ஒரே ஒரு முறை, இப்போது ‘அப்பா’
என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?

- கண்ணீருடன்

மு.க.ஸ்டாலின்

by Swathi   on 08 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.