குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் 68-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடத்தப்படுகிறது.
இதில் கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. கவிதை போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘இளங்கவி விருது 2017’, கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு சிந்தனைச் சிற்பி விருது 2017, ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு வரைகலைச் சுடரொளி விருது 2017 மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
மொத்தப் பரிசுகளின் மதிப்பு : ரூ 60,000
முதல் பரிசு ரூ. 2000, விருது சான்றிதழ் மற்றும் சீல்டு
இரண்டாம் பரிசு ரூ. 1,500 விருது சான்றிதழ் மற்றும் சீல்டு
மூன்றாம் பரிசு : ரூ.1,000 விருது சான்றிதழ் மற்றும் சீல்டு
நான்காம் பரிசு : ரூ. 500 விருது சான்றிதழ் மற்றும் சீல்டு
ஐந்தாம் பரிசாக மூன்று போட்டிக்குமாக ரூ. 200 மதிப்புள்ள 225 சீல்டுகள் வழங்கப்படும்.
ஒருவரே மூன்று போட்டிகளிலும் பங்கேற்கலாம். ஒவ்வொரு போட்டிக்கும் நுழைவுக் கட்டணம் ரூ.50 ( ஐம்பது ரூபாய் ).
ஒவ்வொரு படைப்பின் முன்பக்கத்திலும் மாணவர் பெயர், வகுப்பு, கல்லூரி முகவர், ஒருங்கிணைப்பாளர் பெயர், ஒருங்கிணைப்பாளர் அலைபேசி எண் கண்டிப்பாக எழுதி இணைக்கப்பட வேண்டும்.
100-க்கும் அதிகமான படைப்புகளை அனுப்பும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறந்த கல்வித் தொண்டிற்கான ஆசிரிய அப்துல் கலாம் விருது 2017 வழங்கப்படும். 200-க்கு மேல் அனுப்பினால் கலைமகள் கவிக்கோவில் விருது வழங்கப்படும்.
நடுவர் தீர்ப்பே இறுதியானது.
கவிதைப் போட்டித் தலைப்பு :
அப்துல் கலாம், உரிமை வேண்டும், நட்பு
கட்டுரைப் போட்டி தலைப்பு :
1 தமிழ் மொழியின் பிறப்பும் சிறப்பும்
2 குடியரசுக்குப் பின் இந்தியா (அ) மாணாக்கர் அரசியலுக்கு வந்தால் ?
3 தற்காலச் சூழலில் பெண்ணுக்குத் தேவை சுதந்திரமா ? பாதுகாப்பா ?
ஓவியப் போட்டித் தலைப்பு :
1 ஒலிம்பிக் போட்டிகளில் பரிசு பெற்ற வீரர்களின் உருவங்கள் (அல்லது)
தேசிய விருது பெற்றவர்களின் உருவங்கள்
2 தமிழக அதிசயங்கள் (அல்லது) சமூக விழிப்புணர்வு
3 நான் ரசித்த இயற்கை (அல்லது ) கோலம் ( புள்ளி, ரங்கோலி)
தொடர்புக்கு :
முனைவர் ஆ. கணேசன்
ஒருங்கிணைப்பாளர்
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம்
94 காந்திமதி இல்லம்
வடக்குத் தெரு
பரமத்தி வேலூர் – 638 182
நாமக்கல் மாவட்டம்
96981 38000 / 99522 09476 / 96981 39000
|