LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற வழங்கப்படும் கிரீன் கார்டு கட்டுப்பாட்டை தளர்த்தும் மசோதா தாக்கல்!

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற வழங்கப்படும் கிரீன் கார்டு கட்டுப்பாட்டை தளர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எச்.-1பி அல்லது எல் விசாவில் தற்காலிகமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற கிரீன் கார்டு பெற வேண்டும். ஆண்டுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கிரீன் கார்டுகளை (நிரந்தர குடியுரிமை அடையாள அட்டை) மட்டுமே அமெரிக்கா வழங்குகிறது. 

ஒவ்வொரு நாட்டிலும் இருந்து விண்ணப்பிக்கும் 7 சதவீதம் பேர் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் கிரீன் கார்டு பெற முடியும். இந்த வரம்புப்படி அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா போன்ற நாட்டினர், கிரீன் கார்டு பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். 

குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் மிக விரைவில் கிரீன் கார்டு பெற்று விடுகின்றனர். கிரீன் கார்டு வழங்குவதில் ஒவ்வொரு நாட்டுக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ள வரம்பை தளர்த்த வேண்டும் என கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்தன. 

இதை ஏற்று கிரீன் கார்டு கட்டுப்பாடு தளர்த்தும் மசோதா, (எச்ஆர் 1044) அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு  112  எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 

இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறி சட்டமானால், எச்-1பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு விரைவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு கிடைக்கும்.

by Mani Bharathi   on 11 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.