உலகில் மிக கொடிய நோய்களுள் ஒன்றான எயிட்சை ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை மூலம் குணப்படுத்தி ஹார்வர்டு மருத்துவ பள்ளி மருத்துவர் சாதனை படைத்துள்ளார். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரில் சர்வதேச எயிட்ஸ் சங்கத்தின் மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் மருத்துவர் டிமோத்தி ஹென்ரிச் தனது எய்ட்ஸ் நோய் குறித்த ஆய்வை வெளியிட்டார். இந்த மருத்துவ முறை பற்றி அவர் கூறும் போது, எயிட்சால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆன்ட்டி ரிட்ரோவைரல் என்னும் மருந்து அளிக்கப்படுகிறது. அவர்களில் இரண்டு நோயாளிகளுக்கு இந்த மருந்துக்குப் பதிலாக, ரத்த அணுக்களை மாற்றும் ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக அரிய வகை ரத்த அணுக்களான சிசிஆர்5 டெல்டா 32 என்னும் ஸ்டெம் செல்கள் மற்றவர்களிடம் இருந்து பெறப்பட்டு எய்ட்ஸ் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பின், அவர்களின் ரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அதில், எயிட்ஸ் நோய் இருந்ததற்கான அறிகுறிகள் தென் படவில்லை என அவர் தெரிவித்தார்.
|