LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

இந்தியாவின் விண்வெளி முயற்சிகளுக்கு உதவுவேன் - சுனிதா வில்லியம்ஸ் உறுதி

 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா 
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். 
கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் 
வெறும் 8 நாள் பயணமாகச் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றார். 
ஆனால் எதிர்பாராத வகையில் 9 மாதங்களுக்கு மேல் அவர் அங்குத் தங்க நேரிட்டது. 
இதையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் கடந்த மார்ச் 19-ம் தேதி 
பத்திரமாகப் பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். மருத்துவச் சிகிச்சைக்குப் பின் 
ஓய்வில் இருந்த சுனிதா, சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் திங்கட்கிழமை 
செய்தியாளர்களைச் சந்தித்தார். பூமிக்குத் திரும்பிய பிறகு அவரது முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.
செய்தியாளர்களிடம்  பேசிய சுனிதா, "விண்வெளியிலிருந்து பார்க்கும்போது 
இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாங்கள் இமயமலைக்கு மேல் செல்லும்போது, 
வில்மோர் புட்ச் அருமையான புகைப்படங்களை எடுத்துள்ளார். கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேலே செல்லும்போது 
அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா 
ஒளிரும். இரவிலும் பகலிலும் நம்ப முடியாத வகையில் பிரமிக்க வைத்தது இமயமலை தான்.
இந்தியா எனது தந்தையின் தாய்நாடு. இந்தியா 
சென்று எனது விண்வெளி அனுபவங்களை இந்தியர்களுடன் 
பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறேன். நிச்சயமாக இது ஒருநாள் நடக்கும். 
இந்தியா அற்புதமான ஜனநாயகம் கொண்ட பெரிய நாடு. 
விண்வெளியில் கால் பதிக்க இந்தியா நீண்ட நாள்களாக முயல்கிறது. 
இந்தியாவின் முயற்சிகளுக்கு நான் உதவுவேன்..." என்றார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாகச் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் 9 மாதங்களுக்கு மேல் அவர் அங்குத் தங்க நேரிட்டது. இதையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் கடந்த மார்ச் 19-ம் தேதி பத்திரமாகப் பூமிக்கு அழைத்து வரப்பட்டனர்.

மருத்துவச் சிகிச்சைக்குப் பின் ஓய்வில் இருந்த சுனிதா, சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். பூமிக்குத் திரும்பிய பிறகு அவரது முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.


செய்தியாளர்களிடம்  பேசிய சுனிதா, "விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாங்கள் இமயமலைக்கு மேல் செல்லும்போது, வில்மோர் புட்ச் அருமையான புகைப்படங்களை எடுத்துள்ளார். கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேலே செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிரும். இரவிலும் பகலிலும் நம்ப முடியாத வகையில் பிரமிக்க வைத்தது இமயமலை தான்.


இந்தியா எனது தந்தையின் தாய்நாடு. இந்தியா சென்று எனது விண்வெளி அனுபவங்களை இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறேன். நிச்சயமாக இது ஒருநாள் நடக்கும். இந்தியா அற்புதமான ஜனநாயகம் கொண்ட பெரிய நாடு. விண்வெளியில் கால் பதிக்க இந்தியா நீண்ட நாள்களாக முயல்கிறது. இந்தியாவின் முயற்சிகளுக்கு நான் உதவுவேன்..." என்றார். 

 

by hemavathi   on 03 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஆயத்தமாகிறது சிங்கப்பூர்! அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஆயத்தமாகிறது சிங்கப்பூர்!
வித்தியாசமாகப்  பணிவிலகல் கடிதம் கொடுத்து அதிர வைத்த ஊழியர் வித்தியாசமாகப் பணிவிலகல் கடிதம் கொடுத்து அதிர வைத்த ஊழியர்
இலங்கை விடுதலை அடைந்த 1948 இற்குப் பின்னர் தான்  இந்து, சிங்களப் புத்தாண்டு இலங்கை விடுதலை அடைந்த 1948 இற்குப் பின்னர் தான் இந்து, சிங்களப் புத்தாண்டு
30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பதிவு செய்யாவிட்டால் சிறை - ட்ரம்ப் நிர்வாகம் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பதிவு செய்யாவிட்டால் சிறை - ட்ரம்ப் நிர்வாகம்
Help the Blind Foundation Charity Cricket Tournament in Hong Kong Help the Blind Foundation Charity Cricket Tournament in Hong Kong
டிக் டாக் செயலிக்கான கெடுவை மேலும் 75 நாள்களுக்கு நீட்டித்தார் ட்ரம்ப் டிக் டாக் செயலிக்கான கெடுவை மேலும் 75 நாள்களுக்கு நீட்டித்தார் ட்ரம்ப்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அயர்லாந்து இந்தியத்  தூதரக முதன்மைச் செயலாளர் திரு. முருகராஜ் தாமோதரன்,IFS  அவர்களுடன் ஓர் இலக்கியச் சந்திப்பு : தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு அயர்லாந்து இந்தியத் தூதரக முதன்மைச் செயலாளர் திரு. முருகராஜ் தாமோதரன்,IFS அவர்களுடன் ஓர் இலக்கியச் சந்திப்பு : தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.