LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

2 நாள்களில் பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச்

 

சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நாசா குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று 9 மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன.


வெறும் 8 நாட்கள் பயணமாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்துக்கு இந்த குழு சென்றது. அந்த விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இக்குழு தங்களின் திட்டப்படி திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.


தற்போது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலமாகப் புதிய குழுவினர் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ள நிலையில், 2 நாட்களில் சுனிதா மற்றும் புட்ச் பூமிக்குத் தங்களது பயணத்தைத் தொடங்குவார்கள்.


சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து இவர்கள் பூமிக்குத் திரும்புகின்றனர்.
அவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களும் அங்குப் பணிகளைத் தொடர்வார்கள்.


இவ்விரு குழுக்களுக்கான பணப்பரிமாற்றம் 2 நாட்கள் நீடிக்கும். அதன் பிறகு பழைய குழுவினர் பூமிக்குத் திரும்பும் பயணத்தை மேற்கொள்வார்கள். ஆனால், பூமியில் பாதுகாப்பான மறு நுழைவுக்கான சூழ்நிலைக்காகக் காத்திருக்க நேரிட்டால், ​​இன்னும் சிறிது தாமதம் ஏற்படலாம் என்று சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தின் மேலாளர் டானா வெய்கல் கூறினார்.


"புட்ச் மற்றும் சுனிதா ஆகிய இருவரும் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளனர். அவர்களை மீண்டும் அழைத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் கூறினார்.

 

 

by hemavathi   on 16 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்குச் சிறப்பு மரியாதை! சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்குச் சிறப்பு மரியாதை!
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு  ஏப்ரல் 26-ம் தேதி - வாட்டிகன் அறிவிப்பு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு ஏப்ரல் 26-ம் தேதி - வாட்டிகன் அறிவிப்பு
உலகத்தைக் கலங்க வைத்த போப் பிரான்சிஸின் மறைவு உலகத்தைக் கலங்க வைத்த போப் பிரான்சிஸின் மறைவு
அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஆயத்தமாகிறது சிங்கப்பூர்! அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஆயத்தமாகிறது சிங்கப்பூர்!
வித்தியாசமாகப்  பணிவிலகல் கடிதம் கொடுத்து அதிர வைத்த ஊழியர் வித்தியாசமாகப் பணிவிலகல் கடிதம் கொடுத்து அதிர வைத்த ஊழியர்
இலங்கை விடுதலை அடைந்த 1948 இற்குப் பின்னர் தான்  இந்து, சிங்களப் புத்தாண்டு இலங்கை விடுதலை அடைந்த 1948 இற்குப் பின்னர் தான் இந்து, சிங்களப் புத்தாண்டு
30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பதிவு செய்யாவிட்டால் சிறை - ட்ரம்ப் நிர்வாகம் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பதிவு செய்யாவிட்டால் சிறை - ட்ரம்ப் நிர்வாகம்
Help the Blind Foundation Charity Cricket Tournament in Hong Kong Help the Blind Foundation Charity Cricket Tournament in Hong Kong
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.