LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம்

 

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.


அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்த நாட்டின் விண்வெளி அமைப்பான நாசா இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர்.


இருவரும் 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்கள் இன்றி வெறுமையாகப் பூமிக்குத் திரும்பியது.


இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் 4 வீரர்களுக்குப் பதிலாக இருவர் மட்டுமே சென்றனர். தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் ஆகியோர் உட்பட 7 பேர் உள்ளனர்.


சுனிதா வில்லியம்ஸும், பேரி வில்மோரும் சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கி உள்ளனர். அவர்களுக்குப் பதிலாகப் புதிய வீரர்களைச் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.


அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரைப் பூமிக்கு அழைத்து வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் என்டூரன்ஸ் விண்கலம் கடந்த 12-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கடைசி நேரத்தில் விண்கலம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது.


இதுகுறித்து அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச் 14-ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் 9 ஏவுகணை மூலம் என்டூரன்ஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். இந்த விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மெக்கிளைன், நிக்கோலி அயர்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி, ரஷ்ய விண்வெளி வீரர் கிரிஸ் பெஸ்கோவ் ஆகியோர் செல்கின்றனர். மார்ச் 15-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தில் என்டூரன்ஸ் விண்கலம் இணையும்.


சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து மார்ச் 19-ம் தேதி டிராகன் விண்கலம் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்குத் திரும்ப உள்ளனர். வானிலையைப் பொறுத்து தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாகச் சர்வதேச விண்வெளி ஆய்வு நிபுணர்கள் கூறியதாவது: சர்வதேச விண்வெளி மையத்தில் விண்கலங்களை இயக்க 2 தளங்கள் மட்டுமே உள்ளன. இதில் ஒரு தளத்தில் டிராகன் விண்கலம் ஒன்று நிரந்தரமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் தீ விபத்து உட்பட ஏதாவது ஓர் அசம்பாவிதம் நேரிட்டால் இந்த விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் தப்பிச் செல்ல முடியும்.


மற்றொரு தளத்தின் மூலம் மட்டுமே பூமிக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கும் இடையே விண்கலங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 9-வது குழு சென்ற டிராகன் விண்கலம் 2-ஆவது தளத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. 10-ஆவது குழு என்டூரன்ஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் செல்கிறது. அவர்கள் சென்றடைந்த பிறகு சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேர் அடங்கிய 9-ஆவது குழு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குப் பத்திரமாகத் திரும்பும்.


சுனிதா வில்லியம்ஸ் சுமார் 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் தங்கியிருப்பதால் பூமிக்குத் திரும்பிய உடன் அவரால் நடக்க முடியாது. அவருக்குப் பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படும். சுமார் 45 நாட்கள் முதல் சில மாதங்களுக்கு பிறகே அவரால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். இவ்வாறு சர்வதேச விண்வெளி ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

by hemavathi   on 14 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்குச் சிறப்பு மரியாதை! சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்குச் சிறப்பு மரியாதை!
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு  ஏப்ரல் 26-ம் தேதி - வாட்டிகன் அறிவிப்பு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு ஏப்ரல் 26-ம் தேதி - வாட்டிகன் அறிவிப்பு
உலகத்தைக் கலங்க வைத்த போப் பிரான்சிஸின் மறைவு உலகத்தைக் கலங்க வைத்த போப் பிரான்சிஸின் மறைவு
அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஆயத்தமாகிறது சிங்கப்பூர்! அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஆயத்தமாகிறது சிங்கப்பூர்!
வித்தியாசமாகப்  பணிவிலகல் கடிதம் கொடுத்து அதிர வைத்த ஊழியர் வித்தியாசமாகப் பணிவிலகல் கடிதம் கொடுத்து அதிர வைத்த ஊழியர்
இலங்கை விடுதலை அடைந்த 1948 இற்குப் பின்னர் தான்  இந்து, சிங்களப் புத்தாண்டு இலங்கை விடுதலை அடைந்த 1948 இற்குப் பின்னர் தான் இந்து, சிங்களப் புத்தாண்டு
30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பதிவு செய்யாவிட்டால் சிறை - ட்ரம்ப் நிர்வாகம் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பதிவு செய்யாவிட்டால் சிறை - ட்ரம்ப் நிர்வாகம்
Help the Blind Foundation Charity Cricket Tournament in Hong Kong Help the Blind Foundation Charity Cricket Tournament in Hong Kong
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.