ஐ படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தற்போது எந்திரன் 2 படத்திற்குண்டான வேலைகளில் தற்போது மும்முறமாக ஈடுபட்டுள்ளார். எந்திரன் 2 படத்துக்காக அடுத்த மாதம் சென்னையில் ரஜினிக்கு சிறப்பு மேக்-அப் டெஸ்ட் நடைபெற உள்ளதாம்.
கபாலி படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கவுள்ள படம், எந்திரன் 2. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஆரம்பமாகிறது. எமி ஜாக்ஸன் கதாநாயகி நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. வில்லன் வேடத்துக்கு அர்னால்ட் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை படத்தில் நடிப்பவர்கள் குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எந்திரன் 2 படம் முழுவதும் 3டி கேமராவில் படமாக்கப்பட உள்ளது. இந்தியாவில் 3டி கேமராவில் படமாக்கப்படும் முதல் படம் 'எந்திரன் 2' என்று கூறப்படுகிறது. மேலும் படத்தில் உள்ள சில காட்சிகளை மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் படமாக்க உள்ளார் ஒளிப்பதிவாளர், நீரவ் ஷா.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி, எந்திரன் 2 படத்தின் முதற்கட்டப் பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். தற்போது கபாலி படத்துக்காக பாங்காங்கில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் ரஜினி. இதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு, எந்திரன் 2 படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளில் கலந்துகொள்கிறார். டிசம்பர் முதல்வாரத்தில் சென்னை வரும் ரஜினிக்கு சிறப்பு மேக்-அப் டெஸ்ட் நடைபெற உள்ளது. இதற்காக அவதார் போன்ற முக்கியமான படங்களில் பணியாற்றிய ஒப்பனைக் கலைஞர் சீன் ஃபுட், சென்னை வருகிறார். பாகுபலி படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பிரிவில் பணிபுரிந்த ஸ்ரீனிவாஸ் மோகன், எந்திரன் 2 படத்தில் பணியாற்ற உள்ளார்.
|