LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

சுப்பம்மா தொல்லை

கலிவெண்பா

அப்போது தான்திம்மன் கண்விழித்தான்! 'ஆ'என்றான்;
'எப்போது வந்தீர்கள்?' என்றெழுந்தான் - 'இப்போது
தான்வந்தேன்' என்றான் சுதரிசன். 'தங்கட்கு
மீன்வாங்க நான்போக வேண்டுமே - ஆனதினால்
இங்கே இருங்கள் இதோவருகின் றே'னென்று
தங்காது திம்மன் தனிச்சென்றான் - அங்கந்தச்
சுப்பம்மா தன்னந் தனியாகத் தோட்டத்தில்
செப்புக் குடம்துலக்கிச் செங்கையால் - இப்புறத்தில்
வைக்கத் திரும்பினாள்; வந்த சுதரிசன்சிங்க்
பக்கத்தில் நின்றிருந்தான்; பார்த்துவிட்டாள் - திக்கென்று
தீப்பற்றும் நெஞ்சோடு 'சேதிஎன்ன?' என்றுரைத்தாள்.
'தோப்புக்குப் போகின்றேன் சொல்லவந்தேன் - சாப்பிட்டுச்
செஞ்சிக்குப் போவதென்ற தீர்ப்போடு வந்தேன்.நீர்
அஞ்சிப்பின் வாங்காதீர்; அவ்விடத்தில் - கெஞ்சி
அரசரிடம் கேட்டேன்; அதற்கென்ன என்றார்.
அரசாங்கத் துச்சிப்பாய் ஆக்கி - இருக்கின்றேன்
திம்மனுக்கு நான்செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்.
ஐம்பது வராகன் அரசாங்கச் - சம்பளத்தை
வாங்கலாம் நீங்கள் வயிறாரச் சாப்பிடலாம்;
தீங்கின்றி எவ்வளவோ சேர்க்கலாம் - நாங்களெல்லாம்
அப்படித்தான் சேர்த்தோம். அதனால்தான் எம்மிடத்தில்
இப்போது கையில் இருப்பாக - முப்பத்து
மூவா யிரவரா கன்சேர்த்து மூலையிலே
யாவருங் காணாமல் இருத்தினோம்; - சாவுவந்தால்
யாரெடுத்துப் போவாரோ? பெண்டுபிள்ளை யாருமில்லை.
ஊரெடுத்துப் போவதிலும் உங்கட்குச் - சேருவதில்
ஒன்றும் கவலையில்லை. உங்கட்குப் பிள்ளைகள்
இன்றில்லை யேனும் இனிப்பிறக்கும்; - என்பிள்ளை
வேறு பிறர்பிள்ளை வேறா? இதைநீயே
கூறுவாய்' என்று சுதரிசன் - கூறினான்.
'திண்ணையிலே குந்துங்கள்' என்றுரைத்தாள் சேல்விழியாள்.
வெண்ணெய்என்ற பிள்ளைக்கு மண்ணையள்ளி - உண்ணென்று
தந்ததுபோல் இவ்வாறு சாற்றினளே - இந்தமங்கை
என்று நினைத்த சுதரிசன் திண்ணைக்கே
ஒன்றும்சொல் லாமல் ஒதுங்கினான் - பின்அவளோ
கூடத்தைச் சுற்றிக் குனிந்து பெருக்கினாள்;
'மாடத்திற் பற்கொம்பு வைத்ததுண்டோ? - தேடிப்பார்'
என்றுரைத்துக் கொண்டே எதிர்வந்து 'சுப்பம்மா
ஒன்றுரைக்க நான்மறந்தேன் உன்னிடத்தில் - அன்றொருநாள்
செஞ்சியில் ஒருத்தி சிவப்புக்கல் கம்மலொன்றை
அஞ்சு வராகன் அடகுக்குக் - கெஞ்சினாள்
முற்றுங் கொடுத்தேன் முழுகிற்று வட்டியிலே.
சிற்றினச் சிவப்போ குருவிரத்தம் - உற்றதுபோல்
கோவைப் பழத்தில் மெருகு கொடுத்ததுபோல்
தீவட்டி போல்ஒளியைச் செய்வதுதான் - தேவை யுண்டா?
என்று சுதரிசன் கேட்டான். 'எனக்கதுஏன்?'
என்றுசுப் பம்மா எதிர்அறைக்குச் - சென்றுவிட்டாள்.
திண்ணைக்குச் சென்றான் சுதரிசன்சிங்க். இன்னுமென்ன
பண்ணுவேன் என்று பதறுகையில் - பெண்ணாள்
தெருவிலே கட்டிவைத்த சேங்கன்று தின்ன
இருகையில் வைக்கோலை ஏந்தி - வரக்கண்டே
'இப்பக்கம் நன்செய்நிலம் என்ன விலை?'என்றான்.
'அப்பக்கம் எப்படியோ அப்படித்தான் - இப்பக்கம்'
என்று நடந்தாள். இவனும் உடன்சென்றே
'இன்றுகறி என்ன?' எனக்கேட்டான் - ஒன்றுமே
பேசா திருந்தாள். பிறகுதிண் ணைக்குவந்தான்.
கூசாது பின்னும் குறுக்கிட்டு - 'நீசாது
வேலைஎலாம் செய்கின்றாய்; வேறு துணையில்லை
காலையிலி ருந்துநான் காணுகின்றேன் - பாலைக்
கறப்பாயா? எங்கே கறபார்ப்போம்' என்றான்.
அறப்பேசா மல்போய் அறைக்குள் - முறத்தில்
அரிசி எடுத்தாள். அவனும் அரிசி
பெரிசிதன் என்றுரைத்தான். பேசாள் - 'ஒருசிறிய
குச்சிகொடு பற்குத்த' என்பான். கொடுத்திட்டால்
மச்சுவீ டாய்இதையேன் மாற்றவில்லை? - சீச்சீ
இதுபோது மாஎன்பான். சுப்பம்மா இந்தப்
புதுநோயை எண்ணிப் புழுங்கிப் - பதறாமல்
திம்மனுக் கஞ்சித் திகைத்தாள்.அந் நேரத்தில்
திம்மனும் வந்தான் சிடுசிடுத்தே - 'இம்மட்டும்
வேலையொன்றும் பாராமல் வீணாக நீவீட்டு
மூலையிலே தூங்கினாய் முண்டமே! - பாலைவற்றக்
காய்ச்'சென்றான். சென்றாள் கணவனது கட்டளைக்குக்
கீச்சென்று பேசாக் கிளி.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.