LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பட்டாசுக்கு தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்க, விற்க தடை இல்லை என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி  தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாட்டாசு தயாரிக்க பல்வேறு நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ளது. அதில் பட்டாசு மருந்தில் அலுமினியம் அதிகமாக சேர்க்கக்கூடாது. அதிக சப்தம், அதிக புகை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பட்டாசுகளை வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசு அடைவதாகக் கூறி, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாடு தழுவிய அளவில் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்தது.

இதன்மூலம், காற்று மாசு அளவு 30 விழுக்காடு அளவுக்கு குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் நாடு தழுவிய அளவில் பட்டாசு விற்பனைக்கு தடைவிதிக்கக் கூடாது என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல, முற்றிலும் தடைவிதிக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என கருத்து தெரிவித்தது.

இதையடுத்து, நாட்டு மக்களின் நலனையும் பட்டாசு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்வோம் என்று நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பட்டாசு தயாரிக்க, விற்க தடை இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

நாட்டில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் 90 சதவீதம் அளவுக்கு சிவகாசியில் உற்பத்தியாகிறது. இங்குள்ள ஆயிரத்து 750-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூலம், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர். மேலும், 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகை, வரும் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது.வழங்கப்பட்ட இந்த தீர்ப்ப்பால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

by Mani Bharathi   on 23 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.