நடிகர் சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருக்கிறது.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடிக்க உள்ளார். அதை முடித்துக் கொடுத்ததும் உடனடியாக ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் நடிக்க ஆரம்பிக்க உள்ளாராம் சூர்யா.
அப்படி உருவானால் சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது படமாக அமையும். முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்தையும் பரபர ஆக்ஷன் படமாகத்தான் உருவாக்க உள்ளார்களாம். சில மாதங்களுக்கு முன்பே சுவிட்சர்லாந்து சென்று படத்தின் மொத்தக் கதை, திரைக்கதை, வசனத்தை ஹரி அவரது உதவியாளர்களுடன் எழுதி முடித்து விட்டாராம்.
படத்தின் கதாநாயகி, மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறதாம். ஏற்கனவே சிங்கம் படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் வெளிவந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ளதால், இந்த படத்திலும் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம் படக்குழுவினர்.
|