அஞ்சான் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்து வரும் படம் மாஸ்.
இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். சூர்யா வெங்கட் பிரபு இணையும் முதல் படம் இது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, பிரனிதா நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பார்த்திபனும், சமுத்திரக்கனியும் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
திகில் கலந்த நகைச்சுவையைக் கதைக்களமாகக் கொண்டு மாஸ் படம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.
மாஸ் படத்தின் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. அடுத்து சில காட்சிகளை படமாக்க படக்குழு தூத்துக்குடி செல்கிறது. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பும் தூத்துக்குடியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் வரும் 2 பாடல்களை மட்டுமே படமாக்கியுள்ளனர். மீதமுள்ள பாடல்களை இனி தான் படமாக்க வேண்டுமாம். பிப்ரவரி மாத இறுதியில் படப்பிடிப்பை முடித்து ஏப்ரல் அல்லது மே மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் வெங்கட் பிரபு.
படத்தின் டீசர் வரும் பொங்கல் அன்று வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
|