தேவையானவை :
மைதா மாவு-கால் கப் வறுத்த ரவை-கால் கப் சர்க்கரை-கால் கப் எண்ணெய்-பொரிப்பதற்கு
செய்முறை :
1.மைதா மாவு, ரவை,சர்க்கரை இவை மூன்றையும் கொஞ்சம் தண்ணீரில் கலந்து,கட்டியில்லாமல் கரைத்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
2.அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தில் பாதியளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் நல்ல குழிவான கரண்டியால் பணியாரம் போல் ஊற்றவும்.இரண்டு பக்கமும் வெந்ததும் சூடாக பரிமாறவும். 3.சர்க்கரை சேர்த்திருப்பதால் அதிக எண்ணெய்யைக் குடிக்கும்.கரண்டியால் பூரிக்கு செய்வது போல் எண்ணெய்யை அதன் மேலே ஊற்றி எழும்பும்படி செய்யவும்.
|