|
|||||
t20 உலககோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா |
|||||
t20 உலககோப்பை சூப்பர்-8 சுற்றின் கடைசிப்போட்டி நேற்று மாலை 7.30 மணிக்கு கொழும்பில் நடைபெற்றது. இதி்ல் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி நகொடுக்கப்பட்ட இருபது ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார், ரெய்னா மட்டும் நிலைத்து நின்று ஆடி 45 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவை 121 ரன்களுக்குள் மடக்கினால் அரை இறுதிக்குள் செல்லாலாம் என்ற நிர்பந்தத்தில் இந்திய அணி பந்து வீச துவங்கியது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அம்லா மற்றும் காலிஸ் களம் இறங்கினர். முதல் இரண்டு ஓவரிலேயே இருவரும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடிய பிளேசிஸ் பொறுப்புடன் விளையாடி 65 ரன்களை எடுத்து அந்த அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தார். இக்கட்டான சூழ்நிலையிலும் தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. தென் ஆப்பிரிக்கா 17-வது ஓவரில் 121 ரன்னைக் கடந்தது. இதனால் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்தியாவிற்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை. தென் ஆப்பிர்க்க அணியை வென்றும் அரையிறுதி வாய்ப்பை இழந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது இந்திய அணி.
t20 உலககோப்பை சூப்பர்-8 சுற்றின் கடைசிப்போட்டி நேற்று மாலை 7.30 மணிக்கு கொழும்பில் நடைபெற்றது. இதி்ல் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி நகொடுக்கப்பட்ட இருபது ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார், ரெய்னா மட்டும் நிலைத்து நின்று ஆடி 45 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவை 121 ரன்களுக்குள் மடக்கினால் அரை இறுதிக்குள் செல்லாலாம் என்ற நிர்பந்தத்தில் இந்திய அணி பந்து வீச துவங்கியது.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அம்லா மற்றும் காலிஸ் களம் இறங்கினர். முதல் இரண்டு ஓவரிலேயே இருவரும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடிய பிளேசிஸ் பொறுப்புடன் விளையாடி 65 ரன்களை எடுத்து அந்த அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தார். இக்கட்டான சூழ்நிலையிலும் தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. தென் ஆப்பிரிக்கா 17-வது ஓவரில் 121 ரன்னைக் கடந்தது.
இதனால் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்தியாவிற்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை. தென் ஆப்பிர்க்க அணியை வென்றும் அரையிறுதி வாய்ப்பை இழந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது இந்திய அணி.
|
|||||
by Swathi on 03 Oct 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|