LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: இம்ரான் கான் பேட்டி!

"பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்’’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார். 

சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவின் சமாதி, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள கர்தார்பூரில் உள்ளது.  இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் இங்கு புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். குருநானக்கின் 549வது பிறந்தநாளை முன்னிட்டு, பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் கோயிலில் இருந்து சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் எல்லை வரை சாலை அமைக்க மத்திய அரசும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து கர்தார்பூரில் குருநானக் சமாதி வரை சாலை போட பாகிஸ்தானும் முடிவு செய்தன.

இதற்கான அடிக்கல்லை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இஸ்லாமபாத்தில்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

கர்தார்பூர் சாகிப் சாலை திட்டத்தை இந்தியாவில் உள்ள பலர் நிச்சயம் பாராட்டுவார்கள் என்பது  எனக்கு தெரியும். இந்தியா உடனான உறவை பலப்படுத்த பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன். 

பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுடன் அமைதியை விரும்புகின்றனர். இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினால், மகிழ்ச்சி அடைவேன். முடியாதது எதுவுமே இல்லை. எந்த விஷயம் குறித்தும் பேச நான் தயாராக இருக்கிறேன்.

காஷ்மீர் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது. அமைதிக்கான முயற்சி ஒரு பக்கமாக இருக்க முடியாது. இந்தியாவிடம் இருந்து சாதகமான முடிவு ஏற்பட, இந்தியாவில் அடுத்த மக்களவை தேர்தல் முடியும் வரை நாங்கள் காத்திருக்க தயாராக இருக்கிறோம். 


மும்பை தாக்குதல் நடத்திய ஹபீஸ் சயீத்துக்கு எதிராக ஐ.நா ஏற்கனவே தடை விதித்துள்ளது. அவர் அரசின் பிடியில்தான் இருக்கிறார். 

by Mani Bharathi   on 01 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.