LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    வலைத்தமிழ் சேவைகள்-Services Print Friendly and PDF
- உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் (Tamil Baby Name )

உலக அளவில் தமிழ்ப்பெயர்கள் குறித்து இதுவரை நடந்துள்ளவை:

குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர்கள் குறித்து ஒரு இணையதளம் கொண்டுவரவும், பொருளுடன் அங்கு வெளியிடப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதுகுறித்து களத்தில் ஏற்கனவே நடைபெற்றுவரும் செயல்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து அதிகாரிகள் துறைசார்ந்த செயல்பாட்டு அனுபவம் கொண்டவர்களுடன் கலந்தாலோசித்து நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது நம் கோரிக்கை.
 
உலக அளவில் தமிழ்ப்பெயர்கள் குறித்து இதுவரை நடந்துள்ளவை:
 
1. தமிழ்ப்பெயர்கள் பல நாடுகளில் தமிழ் அறிஞர்கள், அமைப்புகள், ஆர்வலர்கள் பெயர்களை உருவாக்கி, தொகுத்து வைத்துள்ளவை ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தது. குறிப்பாக இலங்கையில் தொகுத்து இணையத்தில் பரப்பியது பெரும் பணி.
 
2. வலைத்தமிழ் தமிழ்ப்பெயர்கள் குழு 15 ஆண்டுகளாக இதுவரை 52000 பெயர்களைத் தொகுத்து இணையத்தில் வெளியிட்டது. வி.ஐ.டி. வேந்தர் அவர்கள் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் டெக்ஸாஸ் மாநாட்டில் உரையாற்றும்போது தமிழ்ப்பெயர்களில் தமிழர்களுக்குக் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இருக்கும் புரிதலற்ற தன்மையைக் குறித்து மிகவும் வருத்தத்துடன் பதிவுசெய்தார் ( https://www.youtube.com/watch?v=XQKc1i604uA... ).
 
3. கூட்டம் முடிந்து வெளியில் பேசிக்கொண்டிருந்தபோது வலைத்தமிழ் தொகுப்பு குறித்து வலைத்தமிழ் ஆசிரியர் ச.பார்த்தசாரதி வேந்தருடன் பேசினார். தொடர்ந்து உரையாடி எழுத்தாளர் பவளசங்கரி ஒத்துழைப்பில் வலைத்தமிழ் தொகுத்தவற்றை வி.ஐ.டி. வேந்தர் அவர்கள் தலைமையில் உருவான தமிழியக்கம் அமைப்புக்கு வழங்கி அவர்கள் பெயரில் நூலாகப் பதிப்பித்து என்று முடிவெடுத்துச் செய்துமுடித்தோம். இதை சிகாகோவில் நடைபெற்ற 10வது உலகத் தமிழ் மாநாடு நிகழ்ச்சியில் "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயரை" என்ற நூலைத் தமிழியக்கம் பதிப்பிக்க ,பதிப்பாசிரியராகப் புலவர் பதுமனார் அவர்களும், தொகுப்பாசிரியர்களாக வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, திருமிகு .பவளசங்கரி ஆகியோர் இடம்பெற்றோம். இதில் இரண்டு பக்கங்கள் தொகுப்பாசிரியர் உரையுடன் நேர்த்தியாக வெளிவந்து உலகெங்கும் முதல் பெரும் தொகுப்பு நூலாக 50000 பெயர்களுடன் வெளிவந்தது. ( https://www.youtube.com/watch?v=2h5DqrzGnSo... ) இன்றும் உலகெங்கும் பயன்படுத்தப்படும் ஒரு நூலாக இது விளங்குகிறது.
 
4. அதன்பின் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி கலந்துகொண்ட தமிழ்வளர்ச்சித்துறை கூட்டம் ஒன்றில் சொற்பரப்பியல் துறையில் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழ்நாடு அரசு ஒரு சேவை எண் அறிவித்துள்ளது அதில் தனித்தமிழ்ப் பெயர்கள் குறித்தான அழைப்புகள் அதிகம் வருகிறது என்று அப்போது இயக்குநராக இருந்த திரு.கோ.விஜயராகவன் கூட்டத்தில் குறிப்பிட்டார். அக்கூட்டத்தில் தமிழியக்கத்தின் நூல் குறித்துக் குறிப்பிட்டு வேந்தருடன் பேசி அந்நூலைத் தமிழ் வளர்ச்சித்துறை சேவை மையத்தில் பயன்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார். பிறகு தமிழ்வளர்ச்சித்துறை வேந்தரைத் தொடர்புகொண்டு அதைத் தமிழ்நாடு அரசுக்கு pdf வடிவிலேயே வேந்தர் வழங்க அது தமிழ்வளர்ச்சித்துறை இணையதளத்தில் சேர்க்கப்பட்டது. வேந்தர் அவர்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை எடுத்துக்கொண்டு எடுத்த வெளியீட்டு, அறிமுக விழா பரப்புரை, ஊடகப் பரப்புரை பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
 
3. நூலாக வந்தாலும் அது களத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் தொடர்ந்து அடர்த்தியாக ஒரு இயக்கமாக அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இதில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு மூன்று முதல் எட்டு எழுத்துகளில் புதிய தமிழ்ப்பெயர்களைப் பொருளுடன் உருவாக்கவேண்டும் , பொதுமக்கள் வைத்துள்ள பல இலட்சம் நல்ல பெயர்களைத் திரட்டி வெளியிடவேண்டும் என்ற ஒருங்கிணைப்புக்கு ஏதுவாக 10-06-2023-ல் நாமக்கல் இராசிபுரம் தமிழ் மாநாட்டில் வலைத்தமிழ் முன்னெடுப்பில் "உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் " என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ( https://www.youtube.com/watch?v=pxzbxl7_eJo... )அவர்கள் தொடங்கிவைத்தார். இதற்கு தலைவராக மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர்.சி.சுப்பிரமணியம் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி அவர்களும், அறிஞர் குழுவினரும் செயல்படுகின்றனர்.
 
4. இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்ப்பெயர்கள் அனைத்தும் இணையத்தில் எளிதாகத் தேடும் வசதியுடன் வெளியிடப்பட்டுள்ளது (https://www.valaitamil.com/baby_names.php ). இயக்கம் தொடங்கி முதல் படியாக உலகெங்கும் அறிவிப்பு செய்து திரட்டியது மேலும் 60000 பெயர்கள் இணைந்து மொத்தம் 1.1 இலட்சம் பெயர்கள் வந்துசேர்ந்தது. இதை இணையத்தில் வெளியிட்டதும் வாசகர்களிடமிருந்து வந்த சில பின்னூட்டங்கள் இதில் பிற மொழிப் பெயர்கள் கலந்துள்ளதை உறுதிசெய்தது. அதையொட்டி வேகத்தைக் குறைத்து நான்கு பகுதிகளாகப் பிரித்து நான்கு தனித்தமிழ் அறிஞர் குழுவிற்கு பிழைதிருத்த வழங்க முடிவுசெய்து இரண்டு பகுதிகள் பிழை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் பணிகள் சென்றுகொண்டுள்ளது. ( https://www.valaitamil.com/world-tamil-name-movement... )
 
5. எவ்விதப் பொருளாதார உதவிகளோ, பின்புலமோ இல்லாமல் , நன்கொடை திரட்டாமல் உணர்வின் அடிப்படையில் நட்புகளைத் திரட்டி, அறிஞர் பெருமக்களைத் திரட்டி தன்னார்வத்துடன் இப்பணி முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒரு தனிச் சேவை எண் (+91 868 100 2229 (BABY) ) பெறப்பட்டு அது பொதுமக்களால் நூற்றுக்கணக்கில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
இதை வலுப்படுத்தத் தேவையானவை:
இந்தக் குழந்தைப் பெயர்களில் இன்றைய நிலை குறித்துக் கவலைகொண்டு ஏதும் தீர்வு காண்பது அவசியம் என்று கருதுபவர்கள்
புரவலராகப் பொறுப்பேற்று நீங்களே கீழ்க்காணும் ஒரு பங்களிப்பைச் செய்துமுடிக்கலாம்.
 
1. ஒரு முழுநேர ஊழியர் ஒருவரை ஒரு புரவலர் பொறுப்பேற்றல்.
2. 1.1 இலட்சம் பெயர்களில் பாதிப் பெயர்கள் போக மீதியை பிழைப்பார்த்து கொடுக்க தனித்தமிழ் அறிஞர்கள் இருவர்.
3. கைப்பேசி செயலி உருவாக்கி தொடர்ந்து பராமரிக்க ஒரு புரவலர் பொறுப்பேற்றல்.
4. ஐந்து விதமான நூல்களாகப் பதிப்பித்து திருமணம் உள்ளிட்டவற்றில் பரிசாகக் கொண்டுசேர்த்தல்.
5. திருக்குறள் 40000 நூல்கள் வழங்குவதுபோன்று ஒரு புரவலர் கைகோர்த்து தமிழ்நாட்டின் 15978 கிராமங்களுக்கு ஓர் ஆண்டுக்கு இரண்டு நூல்கள் வீதம் 32000 நூல்களை இலவசமாகக் கொண்டுசேர்த்தல். அடுத்த 10 ஆண்டுகளில் 3.2 இலட்சம் நூல்கள் ஒவ்வொரு கிராமத்திலும் 5 வீடுகளுக்கு நூல்கள் சென்றடையும். அதைப் பரப்புரை செய்தல்.
6. ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்ப்பெயர்கள் குறித்து ஒரு நிகழ்ச்சி நடத்தி தமிழ்ப்பெயர் வைத்துள்ள படங்களுக்குப் பரிசு, புதிய பெயர்களை வைத்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பரிசுகள் என்று ஊக்கப்படுத்துதல்.
7. தமிழ்ப்பெயர் வைக்கும் குழந்தைகளுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், தமிழ் விருதாளர்கள் நேரில் சென்று வாழ்த்தி வருதல்.
8. மாநிலத்தில் அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஒரு விளம்பரம் வைத்து இணையம், கைப்பேசி, சேவை மைய எண் குறிப்பிட்டு வாய்ப்பில்லாதவர்கள் அங்குள்ள வரவேற்பறையில் இருக்கும் சாவியைக்கொண்டு அங்கு வைக்கப்பட்டுள்ள நூலை எடுத்து தங்கள் குழந்தைக்குப் பெயரைத் தேர்ந்தெடுக்கலாம்.
9. சோதிடம் 60% மேல் இதில் தமிழ்ப்பெயர்கள் வைப்பதில் தடையாக இருப்பதால், தமிழில் பெயர் வைக்காமல் பிறமொழிப் பெயர்களைப் பரிந்துரைப்பது அறிவுக்குப் புறம்பானது என்றும் அதனால் குழந்தையின் எதிர்காலத்தில் எவ்விதத் தாக்கமும் இல்லை. பகுத்தறிவுக்குப் புறம்பானது என்று பரப்புரை செய்தல். தமிழில் பெயர் வைக்க ஊக்கப்படுத்துதல். இதற்கு ஒரு புரவலர் பொறுப்பேற்றல்.
10. தமிழில் பெயர்களின் பொருளையும் , ஆங்கிலத்தில் பெயர்களைக் குறிப்பிட ஒரு புரவலர் பொறுப்பேற்றல்.
 
 
தொகுப்பு:வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,
ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்
by Swathi   on 01 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்:புதிதாக 10000 பெயர்கள் சேர்ப்பு உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்:புதிதாக 10000 பெயர்கள் சேர்ப்பு
தமிழ்ப்பெயர்களுக்கான ஒருங்கிணைந்த செயல்பாடாக  உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் தமிழ்ப்பெயர்களுக்கான ஒருங்கிணைந்த செயல்பாடாக உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்
தேமொழி அவர்களிடமிருந்து அவரது தந்தையார்  மருத்துவர் மு.சிவக்கண்ணு  அவர்கள் தொகுத்து மணமக்களுக்கு மன்றல் பரிசாகக் கொடுத்துவந்த நூல். தேமொழி அவர்களிடமிருந்து அவரது தந்தையார் மருத்துவர் மு.சிவக்கண்ணு அவர்கள் தொகுத்து மணமக்களுக்கு மன்றல் பரிசாகக் கொடுத்துவந்த நூல்.
குழந்தைக்குப் பெயர் வைக்க உதவும் இணையப் பக்கங்கள் குழந்தைக்குப் பெயர் வைக்க உதவும் இணையப் பக்கங்கள்
தமிழி பெயர்கள் கல்வெட்டுகளிலிருந்து எடுக்கப்பட்டவை தமிழி பெயர்கள் கல்வெட்டுகளிலிருந்து எடுக்கப்பட்டவை
சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்
தமிழ்ப்பெயர்கள் குறித்து தமிழ் மரபு அறக்கட்டளையின் முன்னெடுப்பு தமிழ்ப்பெயர்கள் குறித்து தமிழ் மரபு அறக்கட்டளையின் முன்னெடுப்பு
தமிழ்ப்பெயர்கள் பொது பொருள்கள் தமிழ்ப்பெயர்கள் பொது பொருள்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.