தமிழை வளர்த்தவர்கள் என்று சொல்கிறார்களே. இந்த பட்டியலில் உள்ளவர்கள் தான் தமிழை வளர்த்தார்கள் என்று எத்தனை பேருக்குத் தெரியும். அந்த பணியில் இவர்கள் பட்ட பாடுகளும் அவமானங்களும் சொல்லி மாளாது.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வீரமா முனிவர், டேனியல் புவர், லீவை போல்டிங், மைரன் உவின்சிலோ, எச்.ஆர் ஹொய்சிங்டன், ரேனியஸ், சாமுவேல் பிஸ்க் கிறீன், எல்லீஸ், துரு பாதிரியார், கால்டுவெல், சார்லஸ் கிரால், சாமுவேல் பிள்ளை, சைமன் காசிச் செட்டி, ஜான் முர்டாக், ஹெச் பவார், பர்னல், ஜி.யூ.போப், ஆறுமுகநாவலர், தாமோதரம்பிள்ளை, சதாசிவம்பிள்ளை, உ.வே.சா., தியாகராஜ செட்டியார், ஹெச். கிருஷ்ணம்பிள்ளை, உமறுப் புலவர், ஆப்ரகாம் பண்டிதர், சுவாமி விபுலானந்தர், பாரதியார், பாரதிதாசன், பாண்டித்துரை தேவர், திரு.வி.க., க.சு.பிள்ளை, வையாபுரிப் பிள்ளை, ரா.ராகவையங்கார், பரிதி மால் கலைஞர், ரா.பி.சேதுப்பிள்ளை, மு.ராகவையங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், தெ.பொ.மீ., அவ்வை துரைசாமி பிள்ளை, தண்டபாணி தேசிகர், பொ.வே.சோமசுந்தரனார், மு.அருணாசலம், தி.வே.கோபாலய்யர் செய்கு தம்பி பாவலர், பேராசிரியர். காளமேகனார், நாமக்கல் கவிஞர். வெ.இராமலிங்கனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, இலக்குவணார், கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியனார், மு. வரதராசனார், வி.ஐ.சுப்பிரமணியன்,
தேவநாயப்பாவானர் சாலை இளந்திரையன்...........
இப்படி பல வெளிநாட்டினரும் உள்நாட்டினருமான தங்களுடைய வாழ்நாள் முழுமையும் பாடுபட்டு தமிழ்மொழியை வளர்த்தார்கள்என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 27-08-2018
|