|
|||||
இலக்கணப் பிழை எது? |
|||||
கசடதபற- வல்லினம். ஙஞணதமன- மெல்லினம். யரலவழள- இடையினம் என்பதை அறிவோம்! பெரிய பெரிய அறிஞர்களும் செய்கிற இலக்கணப் பிழையை அறிந்து கொள்வோம். க்ச்ட்த்ப்ற் ஆகிய எழுத்துக்களோடு மற்றொரு புள்ளியெழுத்து வரக் கூடாது. இதற்கு உதாரணம் சொல்வதானால்; லட்ச்சியம் தவறு -- லட்சியம் சரி! கடற்க்கரை தவறு -- கடற்கரை சரி! இது போல் பல சொற்களைச் சொல்லலாம். இதனை நினைவில் கொள்ள வல்லினம் மிகாது என்றும் வலி மிகாது என்றும் சொல்வார்கள். அதேபோல் இடையினம் மிகும் என்பதை இடை மிகும் என்பார்கள். உதாரணம் சொல்வதாயின்: மேய்சல் தவறு -- மேய்ச்சல் சரி! வேர்கடலை தவறு -- வேர்க்கடலை சரி! சூழ்சி தவறு -- சூழ்ச்சி சரி! மேல்பக்கம், கீழ்பக்கம் தவறு -- மேல்ப்பக்கம், கீழ்ப்பக்கம் சரி இலக்கணப் பிழையின் ஒரு துளியே இது! இனியாவது பிழைகள் வராமல் தவிர்க்கலாமே? -கவிஞர் மணி பாரதி |
|||||
by Mani Bharathi on 17 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|