ஏடிஎம் எந்திரங்கள் வங்கிப் படிவங்களில் தமிழ் இருக்க வேண்டும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்
மாநில வங்கி குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, வங்கியின் ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் வங்கிப் படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் பொது மக்களுடன் தொடர்பில் இருக்கும் ஊழியர்கள் தமிழ் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைக்கான பரிந்துரைகளும் பெறப்பட்டன.
|