LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

தமிழ்மொழிக்கான தரப்படுத்தப் பணிகள் . . .

தமிழ் வளர்ச்சியில் இன்றைய ஒரு மிக மிகத் தேவையான பணி ... இன்றைய எழுத்துத்தமிழுக்கான தரப்படுத்தம் (Standardization) . பண்டைக்காலத்தில் எழுத்துமொழியில் அமைந்த தமிழ் இலக்கியங்களில் தரப்படுத்தப்பட்ட எழுத்துத்தமிழைப் பயன்படுத்துவதற்காக மொழி இலக்கணங்களும் யாப்பு இலக்கணங்களும் உருவாக்கப்பட்டன. அதாவது இலக்கியத்தில் பயன்பட்ட எழுத்துத்தமிழ் தரப்படுத்தப்பட்டது. அதுவே இலக்கணங்களாக அமைந்தன.
 
இன்றைய காலம் ... உரைநடைக் காலம்! அத்தோடு தமிழ்ச் சமூகத் தேவையையொட்டி, தமிழ்மொழியின் சொல் வளங்களும் இலக்கண அமைப்புக்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. முந்தைய எழுத்துத்தமிழில் இன்றைய தேவையை அடிப்படையாகக்கொண்டு, மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது மறுப்பதற்கு இல்லை! ஆனால் முந்தைய இலக்கியத் தமிழுக்கு மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தம் முறையாக இன்றைய எழுத்துத்தமிழுக்கு மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்மொழிப் பயன்படுத்தத்தில் வேறுபாடுகள் நிலவுகின்றன.
 
இந்நிலையில் இன்றைய உரைநடை எழுத்துத்தமிழுக்குத் தரப்படுத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவது தமிழ்மொழியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாகும். இன்று தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கும் முறையான , தெளிவான கட்டுப்பாடுகள், விதிகள் உண்டு. இது தனிநபர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது இல்லை.
 
இவற்றைக் கண்டறிவது இன்றைய கட்டத்தில் மிகவும் தேவையான ஒன்று. அதுவும் கணினிவழி மொழிப் பயன்பாட்டை - சொல்திருத்தி முதல் மொழிபெயர்ப்புவரை ... பேசுவதை எழுதுவது, எழுதுவதைப் பேசுவது வரை ... கணினிமொழியியலில் பல தொழில்நுட்பங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நுட்பங்களையெல்லாம் தமிழும் தன்வயப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் தமிழ்ச்சமுதாயம் தனது மொழித்திறனிலும் உயர்ந்த வளர்ச்சியைப் பெறும். இதற்கு இன்றைய எழுத்துத்தமிழின் இலக்கண நுட்பங்களையெல்லாம் வெளிக்கொணரவேண்டும்; மொழித்தொழில்நுட்ப அடிப்படையில் அகரமுதலிகள் உருவாக்கப்படவேண்டும். கணினிவழியே தமிழ்ப் பயன்படுத்தத்திற்கான அனைத்து மென்பொருள்களும் உருவாக்கப்படவேண்டும்.
 
மேற்கூறிய அனைத்துப் பணிகளுக்கும் மிக அடிப்படையான பணி . . . இன்றைய எழுத்துத்தமிழுக்கான தரப்படுத்தப் பணி ஆகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் புத்திலக்கணங்கள் உருவாக்கப்படவேண்டும். முந்தைய காலத்தில் பண்டைத் தமிழ் இலக்கியங்களுக்கு மொழிநடையில் வழிகாட்ட உருவாக்கப்பட்ட இலக்கணங்களே இன்றைய தமிழ்ச் சமுதாயத்திற்கும் போதும் என்று கருதக்கூடாது. தமிழ்மொழியின் வளர்ச்சியை இயங்கியல் அடிப்படையில் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தமிழ் நடைபோடவேண்டும்.
 
-தெய்வ சுந்தரம் நயினார்
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.