|
||||||||
ஆகாவலி என்ற சொல்லின் பொருள் !! |
||||||||
கோவைத் தமிழில் ஒருவரைத் திட்டுவதற்கு ‘ஆகாவலி’ என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. ‘அவன் கிடக்கறான்... ஆகாவலி’ என்பார்கள். எதற்கும் உதவாதவன், வினைக்குப் பொருந்தாதவன், அவனை முன்வைத்து எந்தச் செயலையும் ஆற்ற முடியாது என்பன அந்தச் சொல்லின் பொருள்கள்.
கொங்கு தமிழில் உள்ள வசைச்சொற்கள் கடுமையான ஈனப் பொருள்கள் வழங்குவதில்லை. அவற்றில் மென்மையான ஒரு கண்டிப்பு இருக்கும். நால்வர் மத்தியில், குடும்பத்திற்குள்கூட அவற்றைச் சொல்லலாம். பெண்களும் பயன்படுத்தலாம். அந்தப் பண்புகளின்படி இச்சொல்லை ஆராய வேண்டும்.
ஆகாவலி’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்க்கலாம். ஆகா வலி. ஆகாத வலிமை. வாய்கிழியப் பேசுவான், அதைச் செய்யலாம் இதைச் செய்யலாம் என்று நீட்டி முழக்குவானேயொழிய அவனுடைய வலிமைகள் எதற்கும் ஆகாதவை. பயன்படாதவை. அதனால் அவன் ஆகாவலி. இது நேரடிப்பொருள் விளக்கம்.
இந்தச் சொல் மருவித் தோன்றியது என்று கருத முடியுமெனில் அதற்கும் இடமிருக்கிறது. ஆகாயவல்லி என்ற சொல் மருவி ஆகாவலி ஆகியிருக்கலாம். ஆகாயவல்லி என்பதற்குப் ‘பூண்டு அல்லது சீந்தில் என்னும் படர்கொடி’ ஆகிய இரண்டு பொருள்கள் உள்ளன. பூண்டு தனித்து எதற்கும் பயன்படா. சேர்வனவற்றோடு சேர்ந்து எதையோ சாதிக்கும். வெங்காயம் வசைச்சொல்லாக இருப்பதைப்போல அதன் இனமான பூண்டுவைக் குறிக்க ஆகாவலி தோன்றியிருக்கலாம்.
இன்னொரு பொருளான படர்கொடிகள் காலைச் சுற்றி ஆளை விழவைப்பன. இந்த ஆகாவலிகளைக் கூடச் சேர்த்துக்கொண்டு செயலில் ஈடுபட்டால் உதவியாயிருப்பதைவிட இடையூறாகவே இருப்பர்.
எல்லாவகையிலும் பொருத்தமான பொருளுடைய கொங்கு வசைச்சொல் ‘ஆகாவலி.’
- கவிஞர் மகுடேசுவரன்
கோவைத் தமிழில் ஒருவரைத் திட்டுவதற்கு ‘ஆகாவலி’ என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. ‘அவன் கிடக்கறான்... ஆகாவலி’ என்பார்கள். எதற்கும் உதவாதவன், வினைக்குப் பொருந்தாதவன், அவனை முன்வைத்து எந்தச் செயலையும் ஆற்ற முடியாது என்பன அந்தச் சொல்லின் பொருள்கள். கொங்கு தமிழில் உள்ள வசைச்சொற்கள் கடுமையான ஈனப் பொருள்கள் வழங்குவதில்லை. அவற்றில் மென்மையான ஒரு கண்டிப்பு இருக்கும். நால்வர் மத்தியில், குடும்பத்திற்குள்கூட அவற்றைச் சொல்லலாம். பெண்களும் பயன்படுத்தலாம். அந்தப் பண்புகளின்படி இச்சொல்லை ஆராய வேண்டும். ஆகாவலி’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்க்கலாம். ஆகா வலி. ஆகாத வலிமை. வாய்கிழியப் பேசுவான், அதைச் செய்யலாம் இதைச் செய்யலாம் என்று நீட்டி முழக்குவானேயொழிய அவனுடைய வலிமைகள் எதற்கும் ஆகாதவை. பயன்படாதவை. அதனால் அவன் ஆகாவலி. இது நேரடிப்பொருள் விளக்கம். இந்தச் சொல் மருவித் தோன்றியது என்று கருத முடியுமெனில் அதற்கும் இடமிருக்கிறது. ஆகாயவல்லி என்ற சொல் மருவி ஆகாவலி ஆகியிருக்கலாம். ஆகாயவல்லி என்பதற்குப் ‘பூண்டு அல்லது சீந்தில் என்னும் படர்கொடி’ ஆகிய இரண்டு பொருள்கள் உள்ளன. பூண்டு தனித்து எதற்கும் பயன்படா. சேர்வனவற்றோடு சேர்ந்து எதையோ சாதிக்கும். வெங்காயம் வசைச்சொல்லாக இருப்பதைப்போல அதன் இனமான பூண்டுவைக் குறிக்க ஆகாவலி தோன்றியிருக்கலாம். இன்னொரு பொருளான படர்கொடிகள் காலைச் சுற்றி ஆளை விழவைப்பன. இந்த ஆகாவலிகளைக் கூடச் சேர்த்துக்கொண்டு செயலில் ஈடுபட்டால் உதவியாயிருப்பதைவிட இடையூறாகவே இருப்பர். எல்லாவகையிலும் பொருத்தமான பொருளுடைய கொங்கு வசைச்சொல் ‘ஆகாவலி.’ - கவிஞர் மகுடேசுவரன்
|
||||||||
by Swathi on 26 Nov 2014 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|