LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

ஆகாவலி என்ற சொல்லின் பொருள் !!

 

கோவைத் தமிழில் ஒருவரைத் திட்டுவதற்கு ‘ஆகாவலி’ என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. ‘அவன் கிடக்கறான்... ஆகாவலி’ என்பார்கள். எதற்கும் உதவாதவன், வினைக்குப் பொருந்தாதவன், அவனை முன்வைத்து எந்தச் செயலையும் ஆற்ற முடியாது என்பன அந்தச் சொல்லின் பொருள்கள்.
கொங்கு தமிழில் உள்ள வசைச்சொற்கள் கடுமையான ஈனப் பொருள்கள் வழங்குவதில்லை. அவற்றில் மென்மையான ஒரு கண்டிப்பு இருக்கும். நால்வர் மத்தியில், குடும்பத்திற்குள்கூட அவற்றைச் சொல்லலாம். பெண்களும் பயன்படுத்தலாம். அந்தப் பண்புகளின்படி இச்சொல்லை ஆராய வேண்டும்.
ஆகாவலி’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்க்கலாம். ஆகா வலி. ஆகாத வலிமை. வாய்கிழியப் பேசுவான், அதைச் செய்யலாம் இதைச் செய்யலாம் என்று நீட்டி முழக்குவானேயொழிய அவனுடைய வலிமைகள் எதற்கும் ஆகாதவை. பயன்படாதவை. அதனால் அவன் ஆகாவலி. இது நேரடிப்பொருள் விளக்கம்.
இந்தச் சொல் மருவித் தோன்றியது என்று கருத முடியுமெனில் அதற்கும் இடமிருக்கிறது. ஆகாயவல்லி என்ற சொல் மருவி ஆகாவலி ஆகியிருக்கலாம். ஆகாயவல்லி என்பதற்குப் ‘பூண்டு அல்லது சீந்தில் என்னும் படர்கொடி’ ஆகிய இரண்டு பொருள்கள் உள்ளன. பூண்டு தனித்து எதற்கும் பயன்படா. சேர்வனவற்றோடு சேர்ந்து எதையோ சாதிக்கும். வெங்காயம் வசைச்சொல்லாக இருப்பதைப்போல அதன் இனமான பூண்டுவைக் குறிக்க ஆகாவலி தோன்றியிருக்கலாம்.
இன்னொரு பொருளான படர்கொடிகள் காலைச் சுற்றி ஆளை விழவைப்பன. இந்த ஆகாவலிகளைக் கூடச் சேர்த்துக்கொண்டு செயலில் ஈடுபட்டால் உதவியாயிருப்பதைவிட இடையூறாகவே இருப்பர்.
எல்லாவகையிலும் பொருத்தமான பொருளுடைய கொங்கு வசைச்சொல் ‘ஆகாவலி.’
- கவிஞர் மகுடேசுவரன்

கோவைத் தமிழில் ஒருவரைத் திட்டுவதற்கு ‘ஆகாவலி’ என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. ‘அவன் கிடக்கறான்... ஆகாவலி’ என்பார்கள். எதற்கும் உதவாதவன், வினைக்குப் பொருந்தாதவன், அவனை முன்வைத்து எந்தச் செயலையும் ஆற்ற முடியாது என்பன அந்தச் சொல்லின் பொருள்கள்.


கொங்கு தமிழில் உள்ள வசைச்சொற்கள் கடுமையான ஈனப் பொருள்கள் வழங்குவதில்லை. அவற்றில் மென்மையான ஒரு கண்டிப்பு இருக்கும். நால்வர் மத்தியில், குடும்பத்திற்குள்கூட அவற்றைச் சொல்லலாம். பெண்களும் பயன்படுத்தலாம். அந்தப் பண்புகளின்படி இச்சொல்லை ஆராய வேண்டும்.


ஆகாவலி’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்க்கலாம். ஆகா வலி. ஆகாத வலிமை. வாய்கிழியப் பேசுவான், அதைச் செய்யலாம் இதைச் செய்யலாம் என்று நீட்டி முழக்குவானேயொழிய அவனுடைய வலிமைகள் எதற்கும் ஆகாதவை. பயன்படாதவை. அதனால் அவன் ஆகாவலி. இது நேரடிப்பொருள் விளக்கம்.


இந்தச் சொல் மருவித் தோன்றியது என்று கருத முடியுமெனில் அதற்கும் இடமிருக்கிறது. ஆகாயவல்லி என்ற சொல் மருவி ஆகாவலி ஆகியிருக்கலாம். ஆகாயவல்லி என்பதற்குப் ‘பூண்டு அல்லது சீந்தில் என்னும் படர்கொடி’ ஆகிய இரண்டு பொருள்கள் உள்ளன. பூண்டு தனித்து எதற்கும் பயன்படா. சேர்வனவற்றோடு சேர்ந்து எதையோ சாதிக்கும். வெங்காயம் வசைச்சொல்லாக இருப்பதைப்போல அதன் இனமான பூண்டுவைக் குறிக்க ஆகாவலி தோன்றியிருக்கலாம்.


இன்னொரு பொருளான படர்கொடிகள் காலைச் சுற்றி ஆளை விழவைப்பன. இந்த ஆகாவலிகளைக் கூடச் சேர்த்துக்கொண்டு செயலில் ஈடுபட்டால் உதவியாயிருப்பதைவிட இடையூறாகவே இருப்பர்.

எல்லாவகையிலும் பொருத்தமான பொருளுடைய கொங்கு வசைச்சொல் ‘ஆகாவலி.’


- கவிஞர் மகுடேசுவரன்

 

by Swathi   on 26 Nov 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
16-Dec-2014 10:48:52 senguttuvan said : Report Abuse
ஆகாவழி என்பதே உண்மையான வார்த்தை .அதாவது ,சில பாதைகள் எங்கோ நம்மை கொண்டு செல்வது போல் இருக்கும் .அதுவும் தெளிவாக !. அனால் ,அதை நம்பி போனால் ,ஒன்றும் அற்றதாய் முடிந்துவிடும் -எதற்கும் ஆகாத வழியாக- அது போல் ,சிலர் ,நன்றாக பேசுவார்கள், அனால் செயல்பாடு ஜீரோ வாக இருக்கும்.கருத்து; இ.செங்குட்டுவன் .vathalagundu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.