|
||||||||
தமிழிசையை இணையம் வழியே கற்கும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள் .. |
||||||||
![]() இன்றைய வளர்ந்துவரும் கலாச்சார மாற்றத்தில் இசை பின்புலம் இல்லாத வீட்டுக் குழந்தைகளும் தமிழிசையை கற்க ஆர்வம் காண்பிக்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் இசையில் இன்று இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு முறையான அனுபவம்மிக்க இசை ஆசிரியர்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இந்தக் குறையை போக்க குரு.ஆத்மநாதன் அவர்கள் வழிகாட்டுதலில் இணையம் வழியே வீட்டிலிருந்தபடியே தமிழிசை கற்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு சென்று தமிழிசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவரும் திருபுவனம் குரு.ஆத்மநாதன் அவர்கள் கோடையில் வட அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் இசை பயிற்சிப்பட்டறை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவியருக்கு பல மேடை நுணுக்கங்களை, குரல்வளப் பயிற்சிகள் சொல்ல்லிக்கொடுக்கப்பட்டது பெற்றோர்களை மிகவும் கவர்ந்தது. பெற்றோர்கள் இதை தங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து சொல்லிக்கொடுக்க முடியுமா என்று கோரிக்கைவைத்தனர். இதை ஏற்று இணையம் வழியே (Skype) வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வட அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவ-மாணவிகள், பெரியவர்கள் இசையை ஒரு மணி நேரம் தனிப்பயிற்சியாக கற்றுவருகிறார்கள். இதில் தமிழிசை / கர்நாடக இசை அடிப்படையுடன் சேர்த்து பாரதியார், வள்ளலார், பாரதிதாசன், முத்துத்தாண்டவர், புறநானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை சொல்லிக்கொடுக்கப்படுகிறது. அமெரிக்காவில் இயங்கும் "நிகழ்கலைக்கழகம்" என்ற அமைப்பின் முறைப்படுத்தப்பட்ட மூன்று ஆண்டு இசை பாடத்திட்டத்தை பின்பற்றி வகுப்புகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து இதன் தமிழிசை குரு.ஆத்மநாதன் அவர்களுடன் பேசியபோது குழந்தைகள் மட்டுல்லாது, திருமுறை, திருப்புகழ், வள்ளலார், திரையிசை உள்ளிட்ட பாடல்களை பாட விருப்பமுடைய பெரியவர்களும் இந்த வகுப்பில் சேர்ந்து பயன்பெறுகிறார்கள் என்றும், புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்த நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்ப ஆசிரியர்களின் நேரம் ஒதுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் குறிப்பிடுகையில் அமெரிக்காவில் இயங்கும் தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ச்சங்கங்கள் தமிழிசை விழாவை, போட்டிகளை, முத்தமிழ் விழாவை நடத்தி ஒவ்வொரு ஆண்டும் இயல்-இசை-நாடகம் என்ற முத்தமிழில் தொய்வடைந்திருக்கும் இசையை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதில் தன் குழந்தையும் பாடி, இசை மேடைகளில் கிடைக்கும் வாய்ப்புகளை கல்வியுடன் சேர்த்து கற்றுத்தேர்ந்து வளரவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் சங்க இலக்கியங்களை இசைவழியே கற்க வாய்ப்பில்லாத சூழலில் தங்கள் குழந்தைகள் இதை கற்றுத்தேர்ந்து பாடுவதை பெருமையாக பார்க்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளில் முறையாக இசையின் அடிப்படையை கற்று தமிழ்ப் பாடல்களை மேடைகளில் பாட விருப்பமானவர்கள் http://www.valaitamil.com/music/ பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார். மேலும் முதல் ஒரு மணி நேர வகுப்பு சோதனை வகுப்பு என்றும் அதைத்தொடர்ந்து விருப்பமிருந்தால் தொடரலாம் என்ற வாய்ப்பும் உள்ளதாக தெரிவித்தார்.
|
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 27 Oct 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|