நவம்பர் 1ஆம் தேதி இனி “தமிழ்நாடு நாள்” தமிழக அரசு அரசாணை வெளியிட்டது
தமிழக அரசு நவம்பர் 1ம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சட்டப்பேரவையில் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி, தனித்துவத் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அதைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பாகக் கொண்டாடப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் எனச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
|