அகரம் பகுதியில் கிடைத்த செப்புப்பட்டயம் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்திற்குரியதென ஆய்வில் தகவல்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் பேராசிரியர் ஆ.பிரபு என்பவரது ஆய்வுக்குழு, தங்களது கள ஆய்வின்போது கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தின் செப்புப்பட்டயம் ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.
இச்செப்புப்பட்டயம் 600 ஆண்டுகள் பழைமை உடையதாகும். திருப்பத்தூர் அகரம் கிராமத்தில் லட்சுமி நாராயண சுவாமி கோவில் தர்மகர்த்தா பலராமன் என்பவரிடம் இச்செப்புப்பட்டயம் இருந்துள்ளது.
சுத்தம் செய்து அதனை படித்த போது அது கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது. கிருஷ்ணதேவராயரின் மெய்க்கீர்த்தி இதில் விவரிக்கப்பட்டுள்ளது. 615 கிராம் எடையுடன் இச்செப்புப்பட்டயம் மேற்புறம் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.
கி.பி 1515 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ள இச்செப்புப்பட்டயம் மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாகும். இது குறித்த ஆய்வுகள் மேலும் தொடர்ந்து நடைபெறும் என்று பேராசிரியர் ஆ.பிரபு தெரிவித்தார்.
|