LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள்

 

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்ற முக்கியமான 20 அறிவிப்புகள்.

1. 500 தமிழ் நூல்களை மொழிபெயர்க்க முதற்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கப்படும்

2.சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூரில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்


3.ரூ.88 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் (sponge park) அமைக்கப்படும்

4.ரூ.675 கோடி மதிப்பீட்டில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்

5.ரூ.3500 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்


6.சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்

7.ரூ,6,668 கோடி மதிப்பீட்டில் 7 மாவட்டங்களில் 29.74 லட்சம் மக்கள் பயன்படும் வகையில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அமைக்கப்படும்


8. புதுமைப் பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


9.மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


10.ரூ.77 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும்


11.சுய உதவிக்குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்கும் வகையில் 10,000 சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்படும். 37 ஆயிரம் கோடியில் கடனும் வழங்கப்படும்


12.ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவரைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி சென்னை, தாம்பரத்தில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்


13.2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வுக்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்


14.ரூ.10 கோடி மதிப்பீட்டில் 25 இடங்களில் அன்புச்சோலை முதியோர் பகல் நேரப் பராமரிப்பு மையம் அமைக்கப்படும்


15. 1721 முதுநிலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் இந்தாண்டு நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும்


16.சென்னை, கோவை, மதுரையில் ரூ.275 கோடியில் தலா 1000 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய விடுதிகள் அமைக்கப்படும்


17.தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) இணையப் பாதுகாப்பு (cyber security) உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும்


18.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்


19.ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்


20.நகர்ப்புறப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய திட்டம், ஆகியவை தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன


 

 

by hemavathi   on 14 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம் இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம்
பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள் பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள்
தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி! தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி!
'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா! 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா!
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை -  மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை - மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு
மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு
கடலூர் பெண்  குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை கடலூர் பெண் குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.