LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூ - தமிழக அரசு அதிரடி

 

 தமிழகச் சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை  நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான இலச்சினையில், தமிழ் எழுத்தான ‘ரூ’ இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.


தமிழகச் சட்டப்​பேரவை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்குச் சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.


இதற்கான, இலச்சினையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட' என்ற வாசகத்துடன், “2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, எல்லார்க்கும் எல்லாம்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.


குறிப்பாக, இந்திய ரூபாயைக் குறிக்கும் வகையில், தற்போது  ‘₹’ என்ற குறியீடே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கை  குறித்த இலச்சினையில் ‘ரூ’ என்ற தமிழ் எழுத்து இடம்பெற்றுள்ளது. ரூபாய் என்பதைக் குறிப்பிட ‘ரூ’ என்பது தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மைக் காலமாக மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், மத்திய மாநில அரசுகள் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இலச்சினையில் தமிழ் எழுத்தான ‘ரூ’ இடம்பெற்றுள்ளது, தற்போது பேசுபொருளாகியுள்ளது.

 

 

by hemavathi   on 13 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா? சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?
தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள் தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத்  தமிழக அரசு திட்டம் இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத் தமிழக அரசு திட்டம்
6  முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது
மார்ச் 13-ல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்க்கூடல் மற்றும் 'உலக மொழிகளில் திருக்குறள்' நூல் வெளியீட்டு விழா மார்ச் 13-ல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்க்கூடல் மற்றும் 'உலக மொழிகளில் திருக்குறள்' நூல் வெளியீட்டு விழா
பாலியல் புகாரில் சிக்கிய 23 ஆசிரியர்கள் பணி நீக்கம்- சான்றிதழ்களை  ரத்து செய்யும் பணி தீவிரம் பாலியல் புகாரில் சிக்கிய 23 ஆசிரியர்கள் பணி நீக்கம்- சான்றிதழ்களை ரத்து செய்யும் பணி தீவிரம்
அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ் தெரியாது என்றால் எப்படி அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியும்? - உயர் நீதிமன்றம் கேள்வி அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ் தெரியாது என்றால் எப்படி அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியும்? - உயர் நீதிமன்றம் கேள்வி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.