LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் இயல்பை விட 97 சதவீதம் மழை

 

கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் இயல்பை விட 97 சதவீதம் அதிக மழைப் பதிவாகி உள்ளது என சென்னை வானிலைமையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசினார். "கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைப் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ., மழைப் பதிவாகி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழைப் பதிவாகி உள்ளது.

கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் 245.6 மி.மீ., மழைப் பதிவாகி உள்ளது. இதே காலகட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 124.9 சதவீதம். 97 சதவீதம் மழை, இயல்பை விட அதிகமாகப் பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இதே காலகட்டத்தில் பதிவான மழை அளவு -120 மி.மீ., இயல்பான அளவு - 50 மி.மீ. இயல்பை விட 129 சதவீதம் அதிகம். 


மாவட்ட வாரியாக...
இயல்பை விட மிக அதிகமான மழைப்பொழிவைச் சந்தித்த மாவட்டங்கள் 29
இயல்பை விட அதிக மழைப்பொழிவைச் சந்தித்த மாவட்டங்கள்:11
கடந்த 8 நாட்களில் ( மே 23 முதல் 31 வரை) அதிகபட்சமாக அவலாஞ்சியில் 1410 மி.மீ.,
சின்னக்கல்லாற்றில் 1010 மி.மீ., மழைப் பதிவாகி உள்ளது.

அதிக மழைப் பதிவான மாவட்டங்கள்
(மார்ச் 1 முதல் மே 31 வரையில்)
கள்ளக்குறிச்சி - 276 %
திருநெல்வேலி - 260 %
கடலூர் - 223 %
கோவை - 217 %
விழுப்புரம் - 217 %
திருவாரூர் - 214 %
அரியலூர் - 192 %
நீலகிரி - 182 %
நாகப்பட்டினம் - 170%
மயிலாடுதுறை - 161%
தஞ்சாவூர் - 158 %
திருவண்ணாமலை - 135 %
சென்னை - 129 %
தென்காசி - 109 %
திருவள்ளூர் - 106 %
வேலூர் - 109 %
ராமநாதபுரம் - 104 சதவீதம் 

 

 

by hemavathi   on 31 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா  அமல் ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
வின்பாஸ்ட் மின்கல வாகன விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் வின்பாஸ்ட் மின்கல வாகன விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.