|
|||||
தமிழர் நாகரீகப் பெருமை சொல்ல கீழடி அகழ் அருங்காட்சியகம் |
|||||
தமிழர் நாகரிகப் பெருமை உள்ள கீழடி அகழ் அருங்காட்சியகம் கொரோனா தொற்று காரணமாக தாமதமான கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் கூறியிருக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ள கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூரில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறிய முதன்மைச் செயலர் கீழடி ,அகரம் மற்றும் மணலூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் பார்க்கும் வகையிலும்,தமிழர் நாகரிகத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் சர்வதேச தரத்தில் அகழ் வைப்பகம் அமைய இருப்பதாக தெரிவித்தார். ரூபாய் 12.21 கோடி செலவில் அகழ்வைப்பகம் அமையவுள்ளது. சரியான முறையில் நடைபெறும் அகழாய்வுப் பணிகள் மற்றும் தமிழர் நாகரீகத்தின் பழைமை, சிறப்பு ஆகியவற்றை தெளிவுபடுத்த அமையவிருக்கும் தொல்லியல் ஆணையம் மற்றும் கீழடி அகழ் வைப்பகம் ஆகியவை திருப்தியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளன. |
|||||
by R.Gnanajothi on 30 Jul 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|