LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மறைந்தார் மூத்த சித்த மருத்துவர் மற்றும் மூலிகைமணி இதழாசிரியர் க.வேங்கடேசன்

மறைந்தார் மூத்த சித்த மருத்துவர் மற்றும் மூலிகைமணி இதழாசிரியர் க.வேங்கடேசன்
க.வேங்கடேசன் அவர்கள் வட ஆர்க்காடு பகுதியைச் சேர்ந்த சித்த மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழரின் தனித்துவ மருத்துவ அடையாளமான சித்த மருத்துவத்திற்கென தன் வாழ்நாளை அர்ப்பணித்து அதற்கான அங்கீகாரத்தை வலியுறுத்தி நிலைநாட்டியவர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்துள்ளார்.பிறகு 'தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரது ஆய்வுக் கையேடுகள் தனித்துவமிக்க கருத்துக்கள் நிறைந்தவை.தற்போதும் மருத்துவர்களுக்கு உதவியாக உள்ளவை.

மூலிகைமணி என்ற இதழின் மூலம் தமிழரின் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தினை பற்றிய அரிய கருத்துக்களை எடுத்துரைத்து தெளிவுபடுத்தியவர். ஆயுர்வேத மருத்துவத்தோடு தொடர்புடைய ஒன்றாகக் கருதப்பட்ட சித்த மருத்துவ முறையினை அது தமிழரின் தனித்துவம் மிக்க மருத்துவ முறை என்று மத்திய அரசிடம் எடுத்துரைத்து நிரூபித்தவர்.சித்த மருத்துவம் தமிழரின் தனி அடையாளம் மிக்க மருத்துவமாக மீட்டெடுக்கபட்டதில் இவருடைய பங்களிப்பு முக்கியமானதாகும்.

2007ஆம் ஆண்டு சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்பட்ட போது நிலவேம்பு குடிநீரை அரசிடம் தெரிவித்து அறிமுகம் செய்தவர். 'எய்ட்ஸ் நோய்க்கு சித்த மருத்துவம்'என்ற மாநாட்டினை இம்ப்காப்ஸ் நிறுவனம் மூலம் நடத்தியுள்ளார். அரசுக்கு சித்த மருத்துவ ஆலோசனைகளை தகுந்த வேலைகளில் வழங்கி வந்தவர். தன் வாழ்நாளில் சித்த மருத்துவத்தினை மூச்சாகக் கொண்டு செயற்பட்டு தன் சிறந்த பங்களிப்பினை சமூகத்திற்கு வழங்கிய சித்த மருத்துவர்  க.வேங்கடேசன் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார்.

by R.Gnanajothi   on 06 Aug 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.