தமிழகத்தில் பழைமையான இடங்களைப் பராமரிக்க தொல்லியல் ஆணையம்,தமிழக சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் அறிவிப்பு
திருமலை நாயக்கர் மஹால் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக பார்வையிட வந்த சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் பழைமையான இடங்களைப் பராமரித்துப் பாதுகாக்க தொல்லியல் ஆணையம் அமைப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறினார்.
ரூ 8.27 கோடி அளவில் அளவில் திருமலை நாயக்கர் மஹாலில் சீரமைப்புப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதையும் புதிய விளக்குகள் அமைக்கப்பட இருப்பதையும் தெரிவித்தார்.
தொல்லியல் ஆணையம் அமைப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக அவர் கூறினார். மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் பணிகள் குறித்தும் அப்போது தெரிவித்தார்.
|